பரணர். (பி-ம்.) 5. ‘ஞான்றே’.
(ப-ரை.) மகிழ்நன் - தலைவன், மயங்கு மலர் கோதை குழைய - விராவிய மலரையுடைய நின் மாலை குழையும்படி,முயங்கிய நள் - அணைந்த நாட்கள், தவ சில - மிகச் சிலவாகும், அலர் - பழிமொழியோ, கூகை கோழி - கோட்டானாகிய கோழியையுடைய, வாகை பறந்தலை - வாகை யென்னுமிடத்துள்ள போர்க்களத்தில், பசு பூண் பாண்டியன்வினை வல் அதிகன் - பசிய பூணையணிந்த பாண்டியனதுஏவலிலே வல்ல அதிகன், களிறொடு பட்ட ஞான்றை - தனது யானையோடு பட்ட காலத்தில், ஒளிறு வாள் கொங்கர்ஆர்ப்பினும் பெரிது - விளங்குகின்ற வாட்படையையுடைய கொங்கர்களுடைய வெற்றியாலுண்டாகிய ஆரவாரத்தினும் மிக்கது.
(முடிபு) மகிழ்நன் முயங்கிய நாள் சிலவே; அலர்ஆர்ப்பினும் பெரிது.
(கருத்து) அலர் மிக்கது.
(வி-ரை.) கோதை: தலைவி யணிந்தது. கோதை குழைய முயங்குதல் முயக்கத்தின் செறிவை உணர்த்தியது. சிலவே: ஏ பிரிநிலை. அலரே:ஏ அசை நிலை.
கோழியிருந்து கூவ வேண்டிய விடத்துக் கூகை கூவிற்றாதலின்கூகைக் கோழி யென்றார்;
“கூகைக் கோழி யானாத் தாழிய பெருங்காடு” (புறநா. 364:12-3); கூகையொடு சேர்ந்த காட்டுக் கோழி யென்பதும் பொருந்தும்.
வாகைப் பறந்தலையை, “சூடா வாகைப் பறந்தலை” (அகநா. 125:19) என்று பிறவிடத்தும் இவ்வாசிரியரே கூறுவர். வாகை யென்பது ஓரூர்ப்பெயர் போலும்.
அதிகன் பசும்பூட் பாண்டியனுடைய அதிகாரிகளுள் ஒருவன்; இச்செய்தி; பரணர் பாடிய, “கொளக்குறை படாஅ” (அகநா. 162) என்னும்பாட்டிற் குறிப்பிக்கப்பெறும். பசும்பூட் பாண்டியனுக்கும் கொங்கருக்கும் பகைமையுண்டென்பதும் அவ்விருவரிடையே போர் நிகழ்ந்ததென்பதும்,
| “வாடாப் பூவிற் கொங்க ரோட்டி |
| நாடுபல தந்த பசும்பூட் பாண்டியன்” (அகநா. 253:4-5) |
என்பதனால் வெளியாகும். கொங்கரால் அதிகன் போரிற் கொல்லப்பட்ட பின்னர்ப் பாண்டியன் மிடல் கொண்டு கொங்கரொடு பொருது அவரைத் தோல்வியுறச் செய்திருத்தல் கூடும்.
களிற்றொடுபடுதல் களிற்றுடனிலை யென்னும் துறைப்பாற்படும்.வென்ற வீரர் ஆர்த்தல் இயல்பு. பெரிதே: ஏ அசைநிலை; தேற்றமுமாம்.
ஒப்புமைப் பகுதி 1-2. கோதை குழைய முயங்குதல்: கலித். 68:14, 91:11-2, 112:23; புறநா. 73:14; சீவக. 582, 2034.
5. களிறொடுபடுதல்: “குன்றத் தன்ன களிற்றொடு பட்டோன்”(புறநா. 307:2.)
6. வென்றவீரர் ஆர்த்தல்: குறுந். 34:5, ஒப்பு.
2-6. அலர் ஆர்ப்பினும் பெரிது: குறுந். 328: 4-8, ஒப்பு.
(393)