பேயனார். (பி-ம்.) 1. ‘செல்வாம்’; 2. ‘கனைக காமம்’, ‘களைக காமம்’, ‘கனைஇக் காமம்’; 4. ‘களரிக்கரம்பைப்’; 6. ‘தேரே’.
(ப-ரை.) சேய் ஆறு செல்லாமாயின் - நெடுந்தூரமாகிய வழியைக் கடந்து செல்லேமாயின், இடர் நின்று -துன்பமின்றி,பெரு தோட்கு காமம் களைகலம் என்று - பெரிய தோளை யுடைய தலைவிக்குக் காமநோயைக் களையமாட்டேமென்று, நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி - நன்மையைவிரும்பி நினைத்த மனத்தையுடையவனாகி, முரம்பு கண் உடைய ஏகி - பருக்கையையுடைய மேட்டு நிலத்திடம் விள்ளும்படிபோய், கரம்பை - கரம்பை நிலத்திலே, புதுவழி படுத்த - புதிய வழியை உண்டாக்கிய, வலவோய் - தேர்ப்பாகனே, நோய் உழந்து உறைவியை - நோயினால் வருந்தி உறையும் தலைவியை, நல்கலான் - இறந்துபடாமல்தருதற்குக் காரணமாயினமையின், இன்று தேரோ தந்தனை - இன்றைக்கு நீ தேரையா தந்தனை? தலைவியையே தந்தனை.
(முடிபு) வலவோய், உறைவியை நல்கலான், இன்று தேரோ தந்தனை?
(கருத்து) உரிய காலத்தே விரைவில் தேரைச் செலுத்திய நின் திறமை பாராட்டற்குரியது.
(வி-ரை.) ‘ இன்று செல்லாமாயின் தலைவனை எதிர்நோக்கி நிற்கும் தலைவியின் உயிர் நீங்கும். ஆதலின் இன்றே தேரைச் செலுத்தல்வேண்டும்’ என்பது பாகன் நினைவு. சேயாறாதலின் விரைவிற் செல்ல எண்ணினான்.
‘செல்வாம், களைய காமம்’ என்ற பாடத்திற்கு, ‘இன்று செல்வாமாயின் இடர் இல்லை; நாம் தலைவியின் காம நோயைக் களைவேமாக’ என்று பொருள் கொள்க.
பெருந்தோள்: அன்மொழித்தொகை; மகளிருக்குத் தோள் பெருத்தல் இலக்கணம்.
செல்வதற்குரிய வழி முரம்பில் இன்றியேயும் புதுவழியையுண்டாக்கிச் சென்றானென்றது பாகனது ஆற்றலைக் கூறியபடி. பழையவழியே செல்லின் நீட்டிக்குமென்று கருதிப் புதுவழிப்படுத்தலின் மதியுடை வலவோயென்றான்.
“நீ தலைவியின் உயிர் நீங்காது தருதற்குக் காரணமாயினமையின், தேரைமட்டும் தந்தாயல்லை; அவள் உயிரையுந் தந்தாயாகின்றாய்” என்று தலைவன் பாராட்டினான்.
ஏ:அசை நிலை.
ஒப்புமைப் பகுதி 1. சேயாறு செல்லுதல்: குறுந். 269:1.
2. பெருந்தோள்: குறுந். 335:7.
4-5. முரம்பு கண்ணுடைய ஏகி வழி உண்டாக்குதல்: “முரம்புகண் ணுடைந்த நடவை” (மலைபடு. 432); “முரம்புகண்ணுடையத் திரியுந் திகிரியொடு”(ஐங். 449:1.)
7. நோயுழந் துறைவி: குறுந். 65:5, ஒப்பு. நோய்: குறுந். 13:4,ஒப்பு. உறைவி: குறுந். 192:2, ஒப்பு.
(400)