|
|
இரு நிலம் குறையக் கொட்டிப்பரிந்தின்று |
|
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள், |
|
மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி |
|
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப, |
5 |
பூண்கதில்-பாக!-நின் தேரே: பூண் தாழ் |
|
ஆக வன முலைக் கரைவலம் தெறிப்ப |
|
அழுதனள் உறையும் அம் மா அரிவை |
|
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய |
|
முறுவல் இன் நகை காண்கம்!- |
10 |
உறு பகை தணித்தனன், உரவு வாள் வேந்தே. |
உரை |
|
வினை முற்றிய தலைவன்தேர்ப்பாகற்கு உரைத்தது.-அகம்பன்மாலாதனார்
|
|
நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த |
|
வேய் வனப்புற்ற தோளை நீயே, |
|
என் உயவு அறிதியோ, நல் நடைக் கொடிச்சி! |
|
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல, நின் |
5 |
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே- |
|
போகிய நாகப் போக்கு அருங் கவலை, |
|
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல் |
|
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண, |
|
வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇ, |
10 |
கோள் நாய் கொண்ட கொள்ளைக் |
|
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே. |
உரை |
|
தோழியிற்புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇயது.-அம்மூவனார்
|
|
எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய |
|
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய, |
|
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர், |
|
வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை! |
5 |
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல், |
|
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்; |
|
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத் |
|
துஞ்சாது அலமரு பொழுதின், |
|
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே. |
உரை |
|
இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லியது.-பெருந்தேவனார்
|
|
கண்ணும், தோளும், தண் நறுங்கதுப்பும், |
|
திதலை அல்குலும் பல பாராட்டி, |
|
நெருநலும் இவணர் மன்னே! இன்றே, |
|
பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர் |
5 |
மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம், |
|
சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற |
|
பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன |
|
உவர் எழு களரி ஓமை அம் காட்டு, |
|
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ் சுரம் |
10 |
ஏகுவர் என்ப, தாமே-தம்வயின் |
|
இரந்தோர் மாற்றல் ஆற்றா |
|
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே. |
உரை |
|
பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது.
|
|
ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும், |
|
வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும், |
|
அம்பல் மூதூர் அரவம் ஆயினும், |
|
குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக் |
5 |
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும், |
|
ஆர் இருள் கடுகிய, அஞ்சு வரு சிறு நெறி |
|
வாரற்கதில்ல-தோழி!-சாரல் |
|
கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை, |
|
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி, கிழங்கொடு |
10 |
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் |
|
ஓங்கு மலை நாடன், நின் நசையினானே! |
உரை |
|
தலைவன் வரவு உணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது.-நல்விளக்கனார்
|
|
அறவர், வாழி-தோழி! மறவர் |
|
வேல் என விரிந்த கதுப்பின் தோல |
|
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் |
|
கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக் |
5 |
கை வல் வினைவன் தையுபு சொரிந்த |
|
சுரிதக உருவின ஆகிப் பெரிய |
|
கோங்கம் குவி முகை அவிழ, ஈங்கை |
|
நல் தளிர் நயவர நுடங்கும் |
|
முற்றா வேனில் முன்னி வந்தோரே! |
உரை |
|
குறித்த பருவத்தின்வினைமுடித்து வந்தமை கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது.-நக்கீரர்
|
|
உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல் |
|
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின், |
|
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு |
|
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு, |
5 |
அது கழிந்தன்றே-தோழி!-அவர் நாட்டுப் |
|
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை |
|
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் |
|
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும், |
|
பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே. |
உரை |
|
வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு, தோழிக்கு உரைத்தது.-நக்கண்ணையார்
|
|
யாம் செய் தொல் வினைக்கு எவன்பேதுற்றனை? |
|
வருந்தல்; வாழி!-தோழி!-யாம் சென்று |
|
உரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக் |
|
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு |
5 |
உருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்- |
|
தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி, |
|
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது, |
|
கண்ணீர் அருவியாக |
|
அழுமே, தோழி! அவர் பழம் முதிர் குன்றே. |
உரை |
|
சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-நல்லந்துவனார்
|
|
கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர், |
|
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி, |
|
நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை |
|
அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள், |
5 |
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் |
|
அகல் இலை அகல வீசி, அகலாது |
|
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை, |
|
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு, |
|
இன்னும் வருமே-தோழி!-வாரா |
10 |
வன்கணாளரோடு இயைந்த |
|
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே! |
உரை |
|
''பொருள் முற்றி மறுத்தந்தான்'' எனக் கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது.-இளம் புல்லூர்க் காவிதி
|
|
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர், |
|
உடையோர் பன்மையின் பெருங் கை தூவா, |
|
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த |
|
புகாப் புகர் கொண்ட புன் பூங் கலிங்கமொடு |
5 |
வாடா மாலை துயல்வர, ஓடி, |
|
பெருங் கயிறு நாலும் இரும் பனம் பிணையல் |
|
பூங் கண் ஆயம் ஊக்க, ஊங்காள், |
|
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி, |
|
நல்கூர் பெண்டின், சில் வளைக் குறுமகள் |
10 |
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா |
|
நயன் இல் மாக்களொடு கெழீஇ, |
|
பயன் இன்று அம்ம, இவ் வேந்துடை அவையே! |
உரை |
|
தோழி, தலைமகளுக்கு உரைப்பாளாய், பாணனை நெருங்கி வாயில்மறுத்தது.-அஞ்சில் அஞ்சியார்
|
|