|
|
ஆடிய தொழிலும், அல்கிய பொழிலும், |
|
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு |
|
ஊடலும் உடையமோ-உயர் மணற் சேர்ப்ப! |
|
திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச் |
5 |
சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய, |
|
இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும், |
|
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன், |
|
கள் கமழ், பொறையாறு அன்ன என் |
|
நல் தோள் நெகிழ மறத்தல், நுமக்கே? |
உரை |
|
மணமனையில் பிற்றை ஞான்று புக்க தோழியைத் தலைவன், ''வேறுபடாமை ஆற்றுவித்தாய்; பெரியை காண்'' என்றாற்குத் தோழி சொல்லியது.-உலோச்சனார்
|
|
பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை; |
|
திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப் |
|
பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி |
|
போர் அமை கதவப் புரை தொறும் தூவ, |
5 |
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப் |
|
பயில்படை நிவந்த பல் பூஞ் சேக்கை |
|
அயலும் மாண் சிறையதுவே; அதன்தலை, |
|
''காப்புடை வாயில் போற்று, ஓ'' என்னும் |
|
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி |
10 |
ஒன்று எறி பாணியின் இரட்டும்; |
|
இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே? |
உரை |
|
காப்பு மிகுதிக்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.
|
|
''தோளே தொடி கொட்பு ஆனா; கண்ணே |
|
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே; |
|
நுதலும் பசலை பாயின்று-திதலைச் |
|
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல் |
5 |
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு'' என்று, |
|
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற, |
|
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்- |
|
காமுறு தோழி!-காதல்அம் கிளவி, |
|
இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தெளித்த |
10 |
தோய் மடற் சில் நீர் போல, |
|
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே. |
உரை |
|
வரைவிடை வைத்துப்பிரிவு ஆற்றாளாய தலைவி வற்புறுத்தும் தோழிக்குச்சொல்லியது.-நற்றமனார்
|
|
''இனிதின் இனிது தலைப்படும்'' என்பது |
|
இதுகொல்?-வாழி, தோழி!-காதலர் |
|
வரு குறி செய்த வரையகச் சிறு தினைச் |
|
செவ் வாய்ப் பாசினம் கடீஇயர், ''கொடிச்சி! |
5 |
அவ் வாய்த் தட்டையொடு அவணை ஆக!'' என, |
|
ஏயள்மன் யாயும்; நுந்தை, ''வாழியர், |
|
அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள்! |
|
செல்லாயோ; நின் முள் எயிறு உண்கு'' என, |
|
மெல்லிய இனிய கூறலின், யான் அஃது |
10 |
ஒல்லேன் போல உரையாடுவலே! |
உரை |
|
''இற்செறிப்பார்'' என ஆற்றாளாய தலைவியை, அஃது இலர் என்பது பட, தோழி சொல்லியது.
|
|
தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணை |
|
மா அரை புதைத்த மணல் மலி முன்றில், |
|
வரையாத் தாரம் வரு விருந்து அயரும் |
|
தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர் |
5 |
இனிது மன்றம்ம தானே-பனி படு |
|
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய, |
|
முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும், |
|
வால் உளைப் பொலிந்த, புரவித் |
|
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே. |
உரை |
|
''வரைவு நீட்டிப்ப அலர்ஆம்'' எனக் கவன்ற தோழி சிறைப்புறமாகச்சொல்லியது.-கதப்பிள்ளையார்
|
|
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும், |
|
அரும் பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது, |
|
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல, |
|
என்னை-வாழிய, பலவே!-பன்னிய |
5 |
மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய |
|
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல, |
|
நீப்ப நீங்காது, வரின் வரை அமைந்து, |
|
தோள் பழி மறைக்கும் உதவிப் |
|
போக்கு இல் பொலந் தொடி செறீஇயோனே. |
உரை |
|
சிறைப்புறமாகத்தலைவி தோழிக்கு உரைத்தது.-நற்றங் கொற்றனார்
|
|
தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல், |
|
தட மென் பணைத் தோள், மட நல்லோள்வயின் |
|
பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று |
|
எய்தினை, வாழிய-நெஞ்சே!-செவ் வரை |
5 |
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை, |
|
கயந் தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர், |
|
பெருங் களிறு தொலைத்த முடத் தாள் ஓமை |
|
அருஞ் சுரம் செல்வோர்க்கு அல்குநிழல்'' ஆகும் |
|
குன்ற வைப்பின் கானம் |
10 |
சென்று, சேண் அகறல் வல்லிய நீயே! |
உரை |
|
தலைவன் செலவு அழுங்கியது.-பெருங்கண்ணனார்
|
|
உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை |
|
மலை உய்த்துப் பகரும், நிலையா வாழ்க்கை, |
|
கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த |
|
பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும் |
5 |
தண்ணம் துறைவன், முன் நாள், நம்மொடு |
|
பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல் |
|
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ, |
|
கண் அறிவுடைமை அல்லது, நுண் வினை |
|
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர் |
10 |
முழங்கு திரை இன் சீர் தூங்கும் |
|
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே. |
உரை |
|
''அலர் ஆயிற்று'' என ஆற்றாளாய தலைமகட்குத் தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-அம்மூவனார்
|
|
உலகிற்கு ஆணியாகப் பலர் தொழ, |
|
பல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறு |
|
ஏயினை, உரைஇயரோ!-பெருங் கலி எழிலி! |
|
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு |
5 |
எழீஇயன்ன உறையினை! முழவின் |
|
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்- |
|
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு |
|
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர், |
|
விரவு மலர் உதிர வீசி- |
10 |
இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே! |
உரை |
|
தலைவன் வினைமுற்றி வந்து பள்ளியிடத்தானாக, பெய்த மழையை வாழ்த்தியது.-பெருங்கௌசிகனார்
|
|
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த |
|
சிறு கோல் இணர பெருந் தண் சாந்தம் |
|
வகை சேர் ஐம்பால் தகை பெற வாரி, |
|
புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப் |
5 |
பெருங் கண் ஆயம் உவப்ப, தந்தை |
|
நெடுந் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து, |
|
பந்தொடு பெயரும் பரிவிலாட்டி |
|
அருளினும், அருளாள் ஆயினும், பெரிது அழிந்து |
|
பின்னிலை முனியல்மா நெஞ்சே!-என்னதூஉம் |
10 |
அருந் துயர் அவலம் தீர்க்கும் |
|
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே. |
உரை |
|
குறை மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது.-பூதங்கண்ணனார்
|
|