|
|
மை அற விளங்கிய மணி நிற விசும்பில் |
|
கைதொழும் மரபின் எழு மீன் போல, |
|
பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய, |
|
சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும் |
5 |
துறை புலம்பு உடைத்தே-தோழி!-பண்டும், |
|
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன, |
|
பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக் |
|
கானல்அம் கொண்கன் தந்த |
|
காதல் நம்மொடு நீங்காமாறே. |
உரை |
|
சிறைப்புறமாகத் தோழி சொல்லி, வரைவு கடாயது.-இளநாகனார்
|
|
சிறு கண் யானைப் பெருங் கை ஈர்-இனம் |
|
குளவித் தண் கயம் குழையத் தீண்டி, |
|
சோலை வாழை முணைஇ, அயலது |
|
வேரல் வேலிச் சிறுகுடி அலற, |
5 |
செங் காற் பலவின் தீம் பழம் மிசையும் |
|
மா மலை நாட!-காமம் நல்கென |
|
வேண்டுதும்-வாழிய! எந்தை, வேங்கை |
|
வீ உக வரிந்த முன்றில், |
|
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே. |
உரை |
|
பகல் வருவானை இரவு வா எனத் தோழி சொல்லியது.-முதுவெங்கண்ணனார்
|
|
கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்று |
|
மட மா மந்தி மாணா வன் பறழ், |
|
கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும் |
|
பெருங் கல் நாடனை அருளினை ஆயின், |
5 |
இனி என கொள்ளலைமன்னே; கொன் ஒன்று |
|
கூறுவென் வாழி-தோழி!-முன்னுற |
|
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி, |
|
ஆன்றோர் செல் நெறி வழாஅச் |
|
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே. |
உரை |
|
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, இவள் ஆற்றாள் என்பது உணர்ந்து, சிறைப் புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.-அஞ்சில் ஆந்தையார்
|
|
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது |
|
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித் |
|
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள் |
|
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே |
5 |
அஃது ஆன்று |
|
அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு |
|
கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன் |
|
பங்குனி விழவின் உறந்தையொடு |
|
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே. |
உரை |
|
செவிலியால் அறத்தொடு நிற்கப்பட்ட நற்றாய், தந்தை முதலியோர்க்கு அறத்தொடு நின்றது.
|
|
உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல், |
|
அரவு வாள் வாய முள் இலைத் தாழை |
|
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும் |
|
பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம் |
5 |
மெய் கவின் சிதையப் பெயர்ந்தனனாயினும், |
|
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி, |
|
கண்டனம் வருகம் சென்மோ-தோழி!- |
|
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத, |
|
படு மணிக் கலி மாக் கடைஇ, |
10 |
நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே. |
உரை |
|
வரைவு நீட ஆற்றாளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது.
|
|
நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும் |
|
தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே- |
|
ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், ''பையென |
|
முன்றில் கொளினே நந்துவள் பெரிது'' என, |
5 |
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு |
|
உரை, இனி-வாழி, தோழி!-புரை இல் |
|
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து |
|
அண்ணல் நெடு வரை ஆடி, தண்ணென |
|
வியல் அறை மூழ்கிய வளி என் |
10 |
பயலை ஆகம் தீண்டிய, சிறிதே. |
உரை |
|
தலைமகன் சிறைப்புறமாக, வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.-நம்பி குட்டுவன்
|
|
நனி மிகப் பசந்து, தோளும் சாஅய், |
|
பனி மலி கண்ணும் பண்டு போலா; |
|
இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர் |
|
நீத்து நீடினர் என்னும் புலவி |
5 |
உட்கொண்டு ஊடின்றும் இலையோ?-மடந்தை!- |
|
உவக்காண் தோன்றுவ, ஓங்கி-வியப்புடை |
|
இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன் |
|
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல, |
|
உலகம் உவப்ப, ஓது அரும் |
10 |
வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே! |
உரை |
|
தோழி உரை மாறுபட்டது.-காரிக்கண்ணனார்
|
|
வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங் |
|
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப, |
|
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம், |
|
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய |
5 |
பருவம் செய்த கருவி மா மழை! |
|
''அவர் நிலை அறியுமோ, ஈங்கு'' என வருதல் |
|
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன் |
|
உர உரும் உரறும் நீரின், பரந்த |
|
பாம்பு பை மழுங்கல் அன்றியும், மாண்ட |
10 |
கனியா நெஞ்சத்தானும், |
|
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே. |
உரை |
|
தலைமகள் பருவம் கண்டு அழிந்தது.-கந்தரத்தனார்
|
|
ஞான்ற ஞாயிறு குடமலை மறைய, |
|
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் |
|
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி, |
|
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் |
5 |
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின், |
|
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல் |
|
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும் |
|
மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு |
|
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; ''முன்கை |
10 |
வார் கோல் எல் வளை உடைய வாங்கி, |
|
முயங்கு'' எனக் கலுழ்ந்த இவ் ஊர் |
|
எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே? |
உரை |
|
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.-குன்றியனார்
|
|
ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே- |
|
வை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள் |
|
கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி, |
|
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம் |
5 |
துயில் இடைப்படூஉம் தன்மையதுஆயினும், |
|
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில், |
|
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி, |
|
ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல் |
|
யானை இன நிரை வௌவும் |
10 |
கானம் திண்ணிய மலை போன்றிசினே. |
உரை |
|
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது; நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.-நப்பாலத்தனார்
|
|