131 | | நன்றே, பாண! கொண்கனது நட்பே | | தில்லை வேலி இவ் ஊர்க் | | கல்லென் கௌவை எழாஅக்காலே. | |
| வாயில் வேண்டி வந்த பாணன் தலைமகன் காதன்மை கூறினானாக, தலைமகள் வாயில் மறுப்பாள் அவற்குக் கூறியது. 1 | | |
|
|
132 | | அம்ம வாழி, பாண! புன்னை | | அரும்பு மலி கானல் இவ் ஊர் | | அலர் ஆகின்று, அவர் அருளுமாறே. | |
| வாயில் வேண்டி வந்த பாணன், 'நீர் கொடுமை கூற வேண்டா; நும்மேல் அருள் உடையர்' என்றாற்குத் தலைமகள் சொல்லியது. 2 | | |
|
|
133 | | யான் எவன் செய்கோ? பாண! ஆனாது | | மெல்லம் புலம்பன் பிரிந்தென, | | புல்லென்றன, என் புரி வளைத் தோளே! | |
| வாயிலாய்ப் புகுந்த பாணன் தலைமகள் தோள் மெலிவு கண்டு, 'மனைப்புறத்துப் போய் வந்த துணையானே இவ்வாறு வேறுபடுதல் தகாது' என்றாற்கு அவள் சொல்லியது. 3 | | |
|
|
134 | | காண்மதி, பாண! இருங் கழிப்... | | பாய்பரி நெடுந் தேர்க் கொண்கனொடு | | தான் வந்தன்று, என் மாமைக் கவினே. | |
| பிரிவின்கண் தலைமகள் கவின் தொலைவு கண்டு வெறுத்து ஒழுகுகின்ற பாணற்குத் தலைமகன் வந்துழிக் கவின் எய்திய தலைமகள் சொல்லியது. 4 | | |
|
|
135 | | பைதலம் அல்லேம், பாண! பணைத் தோள், | | ஐது அமைந்து அகன்ற அல்குல், | | நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே. | |
| பரத்தை ஒருத்தியைத் தலைப்பெய்வான் வேண்டி அதனைத் தலைமகன் மறைத்து ஒழுகுகின்றது அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் பாணற்குச் சொல்லியது. 5 | | |
|
|
136 | | நாண் இலை மன்ற, பாண! நீயே | | கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்த | | கானல் அம் துறைவற்குச் சொல் உகுப்போயே! | |
| வாயிலாய்ப் புகுந்து தலைமகன் குணம் கூறிய பாணற்கு வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது. 6 | | |
|
|
137 | | நின் ஒன்று வினவுவல், பாண! நும் ஊர்த் | | திண் தேர்க் கொண்கனை நயந்தோர் | | பண்டைத் தம் நலம் பெறுபவோ மற்றே? | |
| தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கின இடத்தும், அவன் முன்பு செய்த தீங்கு நினைந்து தலைமகள் வேறுபட்டிருந்தாளாக, இனி ' இந்த வேறுபாடு என்?' என்று வினவிய பாணற்கு அவள் சொல்லியது 7 | | |
|
|
138 | | பண்பு இலை மன்ற, பாண! இவ் ஊர் | | அன்பு இல கடிய கழறி, | | மென் புலக் கொண்கனைத் தாராதோயே! | |
| தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது. 8 | | |
|
|
139 | | அம்ம வாழி, கொண்க! எம் வயின் | | மாண் நலம் மருட்டும் நின்னினும், | | பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே. | |
| ஆற்றாமை வாயிலாகப் புகுந்திருந்த தலைமகற்குப் பாணன் வந்துழித் தலைமகள் சொல்லியது. 9 | | |
|
|
140 | | காண்மதி, பாண! நீ த்தற்கு உரியை | | துறை கெழு கொண்கன் பிரிந்தென, | | இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே. | |
| பாணன் தூதாகிச் செல்ல வேண்டும் குறிப்பினளாகிய தலைமகள் அவற்குத் தன் மெலிவு காட்டிச் சொல்லியது. 10 | | |
|
|