171 | | திரை இமிழ் இன் இசை அளைஇ, அயலது | | முழவு இமிழ் இன் இசை மறுகுதொறு இசைக்கும் | | தொண்டி அன்ன பணைத் தோள், | | ஒண் தொடி, அரிவை என் நெஞ்சு கொண்டோளே! | |
| இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் ஆயத்தோடு சொல்லும் தலைமகளைக் கண்டு சொல்லியது. 1 | | |
|
|
471 | | எல் வளை நெகிழ, மேனி வாட, | | பல் இதழ் உண்கண் பனி அலைக் கலங்க, | | துறந்தோன் மன்ற, மறம் கெழு குருசில்; | | அது மற்று உணர்ந்தனை போலாய் | 5 | இன்னும் வருதி; என் அவர் தகவே? | |
| பருவ வரவின்கண் தூதாகி வந்த பாணன் கூறிய வழி, தோழி சொல்லியது. 1 | | |
|
|
474 | | மை அறு சுடர் நுதல் விளங்க, கறுத்தோர் | | செய் அரண் சிதைத்த செரு மிகு தானையொடு | | கதழ் பரி நெடுந் தேர் அதர் படக் கடைஇச் | | சென்றவர்த் தருகுவல் என்னும்; | 5 | நன்றால் அம்ம, பாணனது அறிவே! | |
| பிரிவின்கண் ஆற்றாமை கண்டு, 'தூதாகிச் சென்று அவனைக் கொணர்வல்' என்ற பாணன் கேட்பத் தலைமகள் கூறியது. 4 | | |
|
|
193 | | வலம்புரி உழுத வார் மணல் அடைகரை | | இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும் | | துறை கெழு கொண்க! நீ தந்த | | அறைபுனல் வால் வளை நல்லவோ தாமே? | |
| வரையாது வந்து ஒழுகும் தலைமகன் தலைமகட்கு வளைகொண்டு வந்து கொடுத்துழி, 'பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலன் உடையவோ இவை?' எனத் தலைமகள் மெலிவு சொல்லித் தோழி வரைவுகடாயது. 3 | | |
|
|
197 | | இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி, | | முகம் புதை கதுப்பினள், இறைஞ்சி நின்றோளே | | புலம்பு கொள் மாலை மறைய | | நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே. | |
| தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் தலைவியது நிலைமை கண்டு சொல்லியது. 7 | | |
|
|