191 | | கடற்கோடு செறிந்த, மயிர் வார் முன்கை, | | கழிப் பூத் தொடர்ந்த இரும் பல் கூந்தல், | | கானல் ஞாழல் கவின் பெறும் தழையள். | | வரையர மகளிரின் அரியள் என் | 5 | நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே. | |
| 'நின்னால் காணப்பட்டவள் எவ்விடத்து எத்தன்மையள்?' என்று வினாவிய பாங்கற்குத் தலைமகன் கூறியது. 1 | | |
|
|
192 | | கோடு புலம் கொட்ப, கடல் எழுந்து முழங்க, | | பாடு இமிழ் பனித் துறை ஓடு கலம் உகைக்கும் | | துறைவன் பிரிந்தென, நெகிழ்ந்தன, | | வீங்கின மாதோ தோழி! என் வளையே! | |
| வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள்போலத் தன் மெலிவு நீங்கினமை தோழிக்குத் சொல்லியது. 2 | | |
|
|
193 | | வலம்புரி உழுத வார் மணல் அடைகரை | | இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும் | | துறை கெழு கொண்க! நீ தந்த | | அறைபுனல் வால் வளை நல்லவோ தாமே? | |
| வரையாது வந்து ஒழுகும் தலைமகன் தலைமகட்கு வளைகொண்டு வந்து கொடுத்துழி, 'பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலன் உடையவோ இவை?' எனத் தலைமகள் மெலிவு சொல்லித் தோழி வரைவுகடாயது. 3 | | |
|
|
194 | | கடற் கோடு அறுத்த, அரம் போழ் அவ் வளை | | ஒண் தொடி மடவரல் கண்டிகும்; கொண்க! | | நல் நுதல் இன்று மால் செய்தென, | | கொன் ஒன்று கடுத்தனள், அன்னையது நிலையே. | |
| பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு மனைக்கண் நிகழ்ந்தது கூறி, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. 4 | | |
|
|
195 | | வளை படு முத்தம் பரதவர் பகரும் | | கடல் கெழு கொண்கன் காதல் மட மகள் | | கெடல் அருந் துயரம் நல்கி, | | படல் இன் பாயல் வௌவியோளே. | |
| வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் தனித்து உறைய ஆற்றானாய்ச் சொல்லியது. 5 | | |
|
|
196 | | கோடு ஈர் எல் வளை, கொழும் பல் கூந்தல், | | ஆய் தொடி, மடவரல் வேண்டுதிஆயின் | | தெண் கழிச் சேயிறாப் படூஉம் | | தண் கடல் சேர்ப்ப! வரைந்தனை கொண்மோ. | |
| குறை மறுக்கப்பட்ட தலைமகன் பின்னும் குறைவேண்டியவழித் தோழி சொல்லியது. 6 | | |
|
|
197 | | இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி, | | முகம் புதை கதுப்பினள், இறைஞ்சி நின்றோளே | | புலம்பு கொள் மாலை மறைய | | நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே. | |
| தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் தலைவியது நிலைமை கண்டு சொல்லியது. 7 | | |
|
|
198 | | வளை அணி முன்கை, வால் எயிற்று அமர் நகை, | | இளையர் ஆடும் தளை அவிழ் கானல், | | குறுந் துறை வினவி நின்ற | | நெடுந் தோள் அண்ணல் கண்டிகும், யாமே. | |
| பரத்தையர் மனைக்கண் பல் நாள் தங்கி, பின்பு ஆற்றாமையே வாயிலாக வந்த தலைமகனை எதிர்ப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியது. 8 | | |
|
|
199 | | கானல்அம் பெருந் துறைக் கலிதிரை திளைக்கும் | | வான் உயர் நெடு மணல் ஏறி, ஆனாது, | | காண்கம் வம்மோ தோழி! | | செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே! | |
| தலைமகன் ஒருவழித் தணந்துழி ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கும் தோழி சொல்லியது. 9 | | |
|
|
200 | | இலங்கு வீங்கு எல்வளை! ஆய்நுதல் கவின, | | பொலந்தேர்க் கொண்கன் வந்தனன் இனியே; | | விலங்கு அரி நெடுங் கண் ஞெகிழ்மதி; | | நலம் கவர் பசலையை நகுகம் நாமே! | |
| உடன்போக்குத் துணிந்தவழி, அதற்கு இரவின்கண் தலைமகன் வந்தது அறிந்த தோழி தலைமகளைப் பாயல் உணர்த்திச் சொல்லியது. 10 | | |
|
|