191 | | கடற்கோடு செறிந்த, மயிர் வார் முன்கை, | | கழிப் பூத் தொடர்ந்த இரும் பல் கூந்தல், | | கானல் ஞாழல் கவின் பெறும் தழையள். | | வரையர மகளிரின் அரியள் என் | 5 | நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே. | |
| 'நின்னால் காணப்பட்டவள் எவ்விடத்து எத்தன்மையள்?' என்று வினாவிய பாங்கற்குத் தலைமகன் கூறியது. 1 | | |
|
|
197 | | இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி, | | முகம் புதை கதுப்பினள், இறைஞ்சி நின்றோளே | | புலம்பு கொள் மாலை மறைய | | நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே. | |
| தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் தலைவியது நிலைமை கண்டு சொல்லியது. 7 | | |
|
|
201 | | அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! என்னை | | தானும் மலைந்தான்; எமக்கும் தழை ஆயின; | | பொன் வீ மணி அரும்பினவே | | என்ன மரம்கொல், அவர் சாரலவ்வே! | |
| நொதுமலர் வரைவின்கண் செவிலி கேட்குமாற்றால் தலைமகள் தோழிக்கு அறத்தொடுநிலை குறித்து த்தது. 1 | | |
|
|