தொடக்கம்   முகப்பு
191 - 200 வளைப்பத்து
191
கடற்கோடு செறிந்த, மயிர் வார் முன்கை,
கழிப் பூத் தொடர்ந்த இரும் பல் கூந்தல்,
கானல் ஞாழல் கவின் பெறும் தழையள்.
வரையர மகளிரின் அரியள் என்
5
நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே.
'நின்னால் காணப்பட்டவள் எவ்விடத்து எத்தன்மையள்?' என்று வினாவிய பாங்கற்குத் தலைமகன் கூறியது. 1
197
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி,
முகம் புதை கதுப்பினள், இறைஞ்சி நின்றோளே
புலம்பு கொள் மாலை மறைய
நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே.
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் தலைவியது நிலைமை கண்டு சொல்லியது. 7
201
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! என்னை
தானும் மலைந்தான்; எமக்கும் தழை ஆயின;
பொன் வீ மணி அரும்பினவே
என்ன மரம்கொல், அவர் சாரலவ்வே!
நொதுமலர் வரைவின்கண் செவிலி கேட்குமாற்றால் தலைமகள் தோழிக்கு அறத்தொடுநிலை குறித்து  த்தது. 1
 
மேல்