21 | | முள்ளி நீடிய முது நீர் அடைகரைப் | | புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும் | | தண் துறை ஊரன் தெளிப்பவும், | | உண்கண் பசப்பது எவன்கொல்? அன்னாய்!' | |
| 'புறத்தொழுக்கம் எனக்கு இனி இல்லை' என்று தலைமகன் தெளிப்பவும், 'அஃது உளது' என்று வேறுபடும் தலைமகட்குத் தோழி சொல்லியது. 1 | | |
|
|
22 | | அள்ளல் ஆடிய புள்ளிக் களவன் | | முள்ளி வேர் அளைச் செல்லும் ஊரன் | | நல்ல சொல்லி மணந்து, 'இனி | | நீயேன்' என்றது எவன்கொல்? அன்னாய்!' | |
| களவினில் புணர்ந்து. பின்பு வரைந்து கொண்டு ஒழுகாநின்றதலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்றாக, ஆற்றாளாகியதலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2 | | |
|
|
23 | | முள்ளி வேர் அளைக் களவன் ஆட்டி, | | பூக் குற்று, எய்திய புனல் அணி ஊரன் | | தேற்றம் செய்து நப்புணர்ந்து, இனித் | | தாக்கு அணங்கு ஆவது எவன்கொல்? அன்னாய்! | |
|
|
|
24 | | தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு | | பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர் | | எய்தினன் ஆகின்று கொல்லோ? மகிழ்நன் | | பொலந் தொடி தெளிர்ப்ப முயங்கியவர் | 5 | நலம் கொண்டு துறப்பது எவன்கொல்? அன்னாய்! | |
| 'பரத்தையருள்ளும் ஒருத்தியை விட்டு ஒருத்தியைப் பற்றி ஒழுகுகின்றான்' என்பது கேட்ட தோழி, வாயிலாய் வந்தார் கேட்ப, தலைமகட்குச் சொல்லியது. 4 | | |
|
|
25 | | புயல் புறந்தந்த புனிற்று வளர் பைங் காய் | | வயலைச் செங் கொடி களவன் அறுக்கும் | | கழனி ஊரன் மார்பு பலர்க்கு | | இழை நெகிழ் செல்லல் ஆக்கும் அன்னாய்! | |
|
|
|
26 | | கரந்தைஅம் செறுவில் துணை துறந்து, களவன் | | வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன் | | எம்மும், பிறரும், அறியான்; | | இன்னன் ஆவது எவன்கொல்? அன்னாய்! | |
| தலைமகற்கு வாயிலாகப் புகுந்தார், 'நின் முனிவிற்கு அவன்பொருந்தாநின்றான்' என்றவழி, தலைமகட்குத் தோழி, 'அவன்பாடு அஃது இல்லை' என்பதுபடச் சொல்லியது. 6 | | |
|
|
27 | | செந்நெல்அம் செறுவில் கதிர் கொண்டு, களவன் | | தண்ணக மண் அளைச் செல்லும் ஊரற்கு | | எல் வளை நெகிழச் சாஅய், | | அல்லல் உழப்பது எவன்கொல்? அன்னாய்! | |
| தலைமகன் மனைக்கண் வருங்காலத்து வாராது தாழ்த்துழி, 'புறத்தொழுக்கம் உளதாயிற்று' எனக் கருதி வருந்தும் தலைமகட்குத் தோழி சொல்லியது7. | | |
|
|
28 | | உண்துறை அணங்கு இவள் உறை நோய் ஆயின், | | தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு | | ஒண் தொடி நெகிழச் சாஅய், | | மென் தோள் பசப்பது எவன்கொல்? அன்னாய்! | |
| இற்செறிவித்த இடத்துத் தலைமகட்கு எய்திய வேறுபாடு கண்டு, 'இது தெய்வத்தினான் ஆயிற்று' என்று, தமர் வெறி எடுப்புழி, அதனை விலக்கக் கருதிய தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 8 | | |
|
|
29 | | மாரி கடி கொள, காவலர் கடுக, | | வித்திய வெண் முளை களவன் அறுக்கும் | | கழனி ஊரன் மார்பு உற மரீஇ, | | திதலை அல்குல் நின் மகள் | 5 | பசலை கொள்வது எவன்கொல்? அன்னாய்! | |
| வரைவு எதிர்கொள்ளார் தமர் அவண் மறுப்புழி, தோழி செவிலிக்கு அறத்தோடு நின்றது. 9 | | |
|
|
30 | | வேப்பு நனை அன்ன நெடுங் கண் களவன் | | தண்ணக மண் அளை நிறைய, நெல்லின் | | இரும் பூ உறைக்கும் ஊரற்கு இவள் | | பெருங் கவின் இழப்பது எவன்கொல்? அன்னாய்! | |
|
|
|