தொடக்கம்   முகப்பு
221 - 230 அம்ம வாழிப்பத்து
221
அம்ம வாழி, தோழி! காதலர்
பாவை அன்ன என் ஆய்கவின் தொலைய,
நல் மா மேனி பசப்ப,
செல்வல்' என்ப தம் மலை கெழு நாட்டே.
'ஒருவழித் தணந்து வரைதற்கு வேண்டுவன முடித்து வருவல்' என்று தலைமகன் கூறக்கேட்ட தலைமகள் அவன் சிறைப்புறத்தானாய்க் கேட்ப, தோழிக்குச்சொல்லியது. 1
 
224
அம்ம வாழி, தோழி! நம் மலை
மணி நிறம் கொண்ட மா மலை வெற்பில்
துணி நீர் அருவி நம்மோடு ஆடல்
எளிய மன்னால், அவர்க்கு; இனி,
5
அரிய ஆகுதல் மருண்டனென், யானே,
இற்செறிப்பு உணர்ந்த தலைமகள் ஆற்றாளாய், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது. 4
 
226
அம்ம வாழி,தோழி!நம் மலை
நறுந்தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள்
கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி, நின்
வன்புடை விறல் கவின் கொண்ட
5
அன்பிலாளன் வந்தனன், இனியே.
வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் நீட்டித்து வந்துழித் தோழி தலைமகட்குச் சொல்லியது. 6
229
அம்ம வாழி, தோழி! நாம் அழப்
பல் நாள் பிரிந்த அறனிலாளன்
வந்தனனோ, மற்று இரவில்?
பொன் போல் விறல் கவின் கொள்ளும், நின் நுதலே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீண்டான் என்பது கேட்டு, தலைமகட்கு எய்திய கவினைத் தோழி, தான் அறியாதாள் போன்று, அவளை வினாவியது. 9
 
231
யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப!
இரும் பல் கூந்தல் திருந்துஇழை அரிவை
திதலை மாமை தேயப்
பசலை பாயப் பிரிவு? தெய்யோ!
ஒருவழித் தணந்து வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 1
 
மேல்