221 | | அம்ம வாழி, தோழி! காதலர் | | பாவை அன்ன என் ஆய்கவின் தொலைய, | | நல் மா மேனி பசப்ப, | | செல்வல்' என்ப தம் மலை கெழு நாட்டே. | |
| 'ஒருவழித் தணந்து வரைதற்கு வேண்டுவன முடித்து வருவல்' என்று தலைமகன் கூறக்கேட்ட தலைமகள் அவன் சிறைப்புறத்தானாய்க் கேட்ப, தோழிக்குச்சொல்லியது. 1 | | |
|
|
222 | | அம்ம வாழி, தோழி! நம் ஊர் | | நளிந்து வந்து உறையும் நறுந் தண் மார்பன் | | இன்னினி வாராமாறுகொல் | | சில் நிரை ஓதி! என் நுதல் பசப்பதுவே? | |
| குறி இரண்டன்கண்ணும் வந்தொழுகும் தலைமகன் இடையிட்டு வந்து, சிறைப்புறத்து நின்றுழி, 'நின் நுதல் பசத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 2 | | |
|
|
223 | | அம்ம வாழி, தோழி! நம் மலை | | வரை ஆம் இழிய, கோடல் நீட, | | காதலர்ப் பிரிந்தோர் கையற, நலியும் | | தண் பனி வடந்தை அற்சிரம் | 5 | முந்து வந்தனர் நம் காதலோரே. | |
| வரைவிடை வைத்துப்பிரிந்த தலைமகன் குறித்த பருவத்திற்கு முன்னே வருகின்றமை அறிந்த தோழி தலைமகட்கு மகிழ்ந்து சொல்லியது. 3 | | |
|
|
224 | | அம்ம வாழி, தோழி! நம் மலை | | மணி நிறம் கொண்ட மா மலை வெற்பில் | | துணி நீர் அருவி நம்மோடு ஆடல் | | எளிய மன்னால், அவர்க்கு; இனி, | 5 | அரிய ஆகுதல் மருண்டனென், யானே, | |
| இற்செறிப்பு உணர்ந்த தலைமகள் ஆற்றாளாய், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது. 4 | | |
|
|
225 | | அம்ம வாழி, தோழி! பைஞ் சுனைப் | | பாசடை நிவந்த பனி மலர்க் குவளை | | உள்ளகம் கமழும் கூந்தல் மெல்லியல் | | ஏர் திகழ் ஒள் நுதல் பசத்தல் | 5 | ஓரார்கொல் நம் காதலோரே? | | மெலிவு கூறி வரைவு கடாவக் கேட்ட தலைமகன் தான் வரைதற்பொருட்டால் ஒருவழித் தணந்து நீட்டித்தானாக, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி கூறியது. 5 | | |
|
|
226 | | அம்ம வாழி,தோழி!நம் மலை | | நறுந்தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள் | | கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி, நின் | | வன்புடை விறல் கவின் கொண்ட | 5 | அன்பிலாளன் வந்தனன், இனியே. | | வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் நீட்டித்து வந்துழித் தோழி தலைமகட்குச் சொல்லியது. 6 | | |
|
|
227 | | அம்ம வாழி! தோழி! நாளும், | | நல் நுதல் பசப்பவும், நறுந் தோள் ஞெகிழவும், | | 'ஆற்றலம் யாம்' என மதிப்பக் கூறி, | | நப் பிரிந்து உறைந்தோர் மன்ற; நீ | 5 | விட்டனையோ அவர் உற்ற சூளே? | | ஒருவழித் தணந்து வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. 7 | | |
|
|
228 | | அம்ம வாழி, தோழி! நம் ஊர் | | நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன் | | இரந்து குறையுறாஅன் பெயரின், | | என் ஆவதுகொல் நம் இன் உயிர் நிலையே? | | தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி அறத்தொடு நின்றது. 8 | | |
|
|
229 | | அம்ம வாழி, தோழி! நாம் அழப் | | பல் நாள் பிரிந்த அறனிலாளன் | | வந்தனனோ, மற்று இரவில்? | | பொன் போல் விறல் கவின் கொள்ளும், நின் நுதலே. | | வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீண்டான் என்பது கேட்டு, தலைமகட்கு எய்திய கவினைத் தோழி, தான் அறியாதாள் போன்று, அவளை வினாவியது. 9 | | |
|
|
230 | | அம்ம வாழி, தோழி! நம்மொடு | | சிறு தினைக் காவலன் ஆகி, பெரிதும் நின் | | மென் தோள் ஞெகிழவும், திரு நுதல் பசப்பவும், | | பொன் போல் விறல் கவின் தொலைத்த | 5 | குன்ற நாடற்கு அயர்வர் நன் மணனே. | | தலைமகன் வரைவு வேண்டித் தமரை விடுத்துழி, மறுப்பர்கொல்லோ? என்று அச்சம் உறுகின்ற தலைவிக்குத் தோழி சொல்லியது. 10 | | |
|
|