231 | | யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப! | | இரும் பல் கூந்தல் திருந்துஇழை அரிவை | | திதலை மாமை தேயப் | | பசலை பாயப் பிரிவு? தெய்யோ! | |
| ஒருவழித் தணந்து வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 1 | | |
|
|
232 | | போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க | | ஏதிலாட்டியை நீ பிரிந்ததற்கே, | | அழல் அவிர் மணிப்பூண் நனையப் | | பெயல்ஆனா, என் கண்ணே தெய்யோ! | |
| ஒருவழித் தணந்து வந்த தலைமகன் 'நான் பிரிந்த நாட்கண் நீர் என் செய்தீர்?' எனக் கேட்க, தோழி அவற்குச் சொல்லியது. 2 | | |
|
|
233 | | வருவைஅல்லை; வாடை நனி கொடிதே | | அரு வரை மருங்கின் ஆய்மணி வரன்றி, | | ஒல்லென இழிதரும் அருவி நின் | | கல்லுடை நாட்டுச் செல்லல் தெய்யோ! | |
| ஒருவழித் தணந்து வரைய வேண்டும் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. 3 | | |
|
|
234 | | 'மின் அவிர் வயங்குஇழை ஞெகிழச் சாஅய், | | நன்னுதல் பசத்தல் யாவது?' துன்னிக் | | கனவில் காணும் இவளே | | நனவில் காணாள், நின் மார்பே தெய்யோ!' | |
| இடைவிடாது வந்தொழுகாநின்றே களவு நீடாமல் வரைதற்கு முயல்கின்ற தலைமகன் தலைமகள் வேறுபாடு கண்டு, 'இதற்குக் காரணம் என்?' என்று வினாவியவழி, 'நின்னைக் கனவில் கண்டு, விழித்துக் காணாளாய் வந்தது' எனத் தோழி சொல்லி வரைவு முடுக் | | |
|
|
235 | | கையற வீழ்ந்த மை இல் வானமொடு | | அரிது காதலர்ப் பொழுதே; அதனால், | | தெரிஇழை தெளிர்ப்ப முயங்கி, | | பிரியலம் என்கமோ? எழுகமோ? தெய்யோ! | |
| உடன்போக்கு நேர்வித்த பின்பு தலைமகன் உடன்கொண்டு போவான் இடை யாமத்து வந்துழி, தலைமகட்குத் தோழி சொல்லியது. 5 | | |
|
|
236 | | அன்னையும் அறிந்தனள்; அலரும் ஆயின்று; | | நல் மனை நெடு நகர் புலம்பு கொள உறுதரும், | | இன்னா வாடையும் மலையும்; | | நும் ஊர்ச் செல்கம்; எழுகமோ? தெய்யோ! | |
| களவொழுக்கம் வெளிப்பட்டமையும் தம் மெலிவும் உணர்த்தி, தோழி உடன்போக்கு நயந்தாள் போன்று, வரைவு கடாயது. 6 | | |
|
|
237 | | காமம் கடவ, உள்ளம் இனைப்ப, | | யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின், | | ஓங்கித் தோன்றும் உயர் வரைக்கு | | யாங்கு எனப்படுவது, நும் ஊர்? தெய்யோ! | |
| அல்லகுறிப்பட்டு நீங்கிய தலைமகனை வந்திலனாகக் கொண்டு, அவன் பின்பு வந்துழி, அவற்குத் தோழி சொல்லியது. 7 | | |
|
|
238 | | வார் கோட்டு வயத் தகர் வாராது மாறினும், | | குரு மயிர்ப் புருவை நசையின் அல்கும் | | மாஅல் அருவித் தண் பெருஞ் சிலம்ப! | | நீ இவண் வரூஉம்காலை, | 5 | மேவரும் மாதோ, இவள் நலனே தெய்யோ! | |
| வரையாது வந்தொழுகும் தலைமகனுக்கு, 'இவள் கவின் நீ வந்த காலத்து வருதலால், நீ போன காலத்து அதன் தொலைவு உனக்கு அறியப்படாது' எனத் தோழி சொல்லி, வரைவு கடாயது. 8 | | |
|
|
239 | | சுரும்பு உணக் களித்த புகர் முக வேழம் | | இரு பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம் நின் | | குன்று கெழு நல் நாட்டுச் சென்ற பின்றை, | | நேர் இறைப் பணைத் தோள் ஞெகிழ, | 5 | வாராய்ஆயின், வாழேம் தெய்யோ! | |
| 'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி கூறியது. 9 | | |
|
|
240 | | அறியேமஅல்லேம்; அறிந்தனம் மாதோ | | பொறி வரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச் | | சாந்தம் நாறும் நறியோள் | | கூந்தல் நாறும் நின் மார்பே தெய்யோ! | |
| தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதானமை அறிந்து தலைமகள் புலந்துவழி, அவன் அதனை 'இல்லை' என்று மறைத்தானாக, தோழி சொல்லியது. 10 | | |
|
|