241 | | நம் உறு துயரம் நோக்கி, அன்னை | | வேலன் தந்தனள் ஆயின், அவ் வேலன் | | வெறி கமழ் நாடன் கேண்மை | | அறியுமோ தில்ல? செறி எயிற்றோயே! | |
| இற்செறித்தவழித் தலைமகட்கு எய்திய மெலிவு கண்டு, 'இஃது எற்றினான் ஆயிற்று?' என்று வேலனைக் கேட்பத் துணிந்துழி, அறத்தொடுநிலை துணிந்த தோழி செவிலி கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது. 1 | | |
|
|
246 | | வெறி செறித்தனனே, வேலன் கறிய | | கல் முகை வயப் புலி கழங்கு மெய்ப்படூஉ, | | .................................................................................................................. | | மெய்ம்மை அன்ன பெண்பாற் புணர்ந்து, | 5 | மன்றில் பையுள் தீரும் | | குன்ற நாடன் உறீஇய நோயே. | |
| வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாய் நின்றுழி, அவன் கேட்குமாற்றால் வெறி நிகழாநின்றமை தோழி தலைமகட்குச் சொல்லியது. 6 | | |
|
|
251 | | குன்றக் குறவன் ஆர்ப்பின், எழிலி | | நுண் பல் அழி துளி பொழியும் நாட! | | நெடு வரைப் படப்பை நும் ஊர்க் | | கடு வரல் அருவி காணினும் அழுமே. | |
| வரையாது வந்தொழுகும் தலைமகற்கு வரைவு வேட்ட தோழி கூறியது. 1 | | |
|
|