251 | | குன்றக் குறவன் ஆர்ப்பின், எழிலி | | நுண் பல் அழி துளி பொழியும் நாட! | | நெடு வரைப் படப்பை நும் ஊர்க் | | கடு வரல் அருவி காணினும் அழுமே. | |
| வரையாது வந்தொழுகும் தலைமகற்கு வரைவு வேட்ட தோழி கூறியது. 1 | | |
|
|
93 | | எருமை நல் ஏற்றினம் மேயல் அருந்தென, | | பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா, | | செய்த வினைய மன்ற பல் பொழில் | | தாது உண் வெறுக்கைய ஆகி, இவள் | 5 | போது அவிழ் முச்சி ஊதும் வண்டே. | |
| முயக்கம் பெற்றவழிப் பிறந்த வெறிநாற்றத்தால் பண்டையளவு அன்றி வண்டுகள் மொய்த்தனவாக, 'இதற்குக் காரணம் என்?' என்று வினாவிய செவிலித் தாய்க்குக் கூறுவாள் போன்று, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. 3 | | |
|
|
96 | | அணி நடை எருமை ஆடிய அள்ளல், | | மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் | | கழனி ஊரன் மகள், இவள்; | | பழன ஊரன் பாயல் இன் துணையே. | |
| பரத்தையர் பலரோடும் ஒழுகுதல் கண்டு பொறாதிருந்த தலைமகள், தலைமகன் மனைக்கண் புகுந்துழி, உடன்படுதல் கண்ட வாயில்கள் தம்முள்ளே சொல்லியது. 6 | | |
|
|
97 | | பகன்றை வால் மலர் மிடைந்த கோட்டைக் | | கருந் தாள் எருமைக் கன்று வெரூஉம், | | பொய்கை, ஊரன் மகள், இவள்; | | பொய்கைப் பூவினும் நறுந் தண்ணியளே. | |
| புறத்தொழுக்கம் இன்றியே இருக்கவும், 'உளது' என்று புலந்த தலைமகளைப் புலவி நீக்கிய தலைமகன், புணர்ச்சியது இறுதிக்கண், தன்னுள்ளே சொல்லியது. 7 | | |
|
|
264 | | இளம் பிறை அன்ன கோட்ட கேழல் | | களங்கனி அன்ன பெண்பாற் புணரும் | | அயம் திகழ் சிலம்ப! கண்டிகும் | | பயந்தன மாதோ, நீ நயந்தோள் கண்ணே! | |
| வரையாது வந்து ஒழுகும் தலைமகனைப் பகற்குறிக்கண்ணே எதிர்ப்பட்டுத் தோழி வரைவு கடாயது. 4 | | |
|
|
266 | | சிறு கண் பன்றிப் பெருஞ் சின ஒருத்தலொடு | | குறுக் கை இரும் புலி பொரூஉம் நாட! | | நனி நாண் உடையை மன்ற | | பனிப் பயந்தன, நீ நயந்தோள் கண்ணே! | |
| நொதுமலர் வரைவு பிறந்துழி, தலைமகட்கு உளதாகிய வேறுபாடு தோழி கூறி, தலைமகனை வரைவு கடாயது. 6 | | |
|
|
269 | | கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை | | விளைந்த செறுவின் தோன்றும் நாடன் | | வாராது அவண் உறை நீடின் நேர் வளை | | இணை ஈர் ஓதி! நீ அழ | 5 | துணை நனி இழக்குவென், மடமையானே. | |
| குறை நயப்பக் கூறி தலைமகளைக் கூட்டிய தோழி, அவன் இடையிட்டு வந்து சிறைப்புறத்து நின்றுழி, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. 9 | | |
|
|