தொடக்கம்   முகப்பு
271 - 280 குரக்குப்பத்து
271
அவரை அருந்த மந்தி பகர்வர்
பக்கின் தோன்றும் நாடன் வேண்டின்,
பசுப்போல் பெண்டிரும் பெறுகுவன்;
தொல் கேள் ஆகலின், நல்குமால் இவட்கே.
தலைமகன் வரைவுவேண்டிவிடத் தமர் மறுத்துழி, செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 1
 
272
கரு விரல் மந்திக் கல்லா வன் பறழ்
அரு வரைத் தீம் தேன் எடுப்பி, அயலது
உரு கெழு நெடுஞ் சினைப் பாயும் நாடன்
இரவின் வருதல் அறியான்;
5
'வரும் வரும்' என்ப தோழி! யாயே.
அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் சிறைப்புறத்தானாக, முன்னை நாள் நிகழ்ந்ததனைத் தோழிக்குச் சொல்லுவாள் போன்று, தலைமகள் சொல்லியது. 2
 
273
அத்தச் செயலைத் துப்பு உறழ் ஒண் தளிர்
புன் தலை மந்தி வன் பறழ் ஆரும்
நல் மலை நாட! நீ செலின்,
நின் நயந்து உறைவி என்னினும் கலிழ்மே.
வரைவிடை வைத்துப் பிரியும் தலைமகன் 'நின் துணைவியை உடம்படுவித்தேன்; இனி நீயே இதற்கு உடம்படாது கலிழ்கின்றாய்' என்றாற்குத் தோழி கூறியது. 3
 
274
மந்திக் கணவன் கல்லாக் கடுவன்,
ஒண் கேழ் வயப்புலி குழுமலின், விரைந்து, உடன்
குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன்
சென்றனன் வாழி, தோழி! என்
5
மென் தோள் கவினும், பாயலும், கொண்டே.
வரைவிடை வைத்துப் பிரிந்துழி, ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 4
 
275
குரங்கின் தலைவன் குரு மயிர்க் கடுவன்
சூரல்அம் சிறு கோல் கொண்டு, வியல் அறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட!
யாம் நின் நயந்தனம் எனினும், எம்
5
ஆய்நலம் வாடுமோ அருளுதி எனினே?
வரையாது வந்தொழுகும் தலைமகன் இடையிட்டு வருதலால், எதிர்ப்பாடு பெறாத தோழி குறியிடத்து எதிர்ப்பட்டு, அவன் கொடுமை கூறி, நெருங்கிச் சொல்லியது. 5
 
276
மந்திக் காதலன் முறி மேய் கடுவன்
தண் கமழ் நறைக் கொடி கொண்டு, வியல் அறைப்
பொங்கல் இள மழை புடைக்கும் நாட!
நயவாய்ஆயினும் வரைந்தனை சென்மோ
5
கல் முகை வேங்கை மலரும்
நல் மலை நாடன் பெண்டு எனப் படுத்தே!
வரையாது வந்தொழுகும் தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது. 6
 
277
குறவர் முன்றில் மா தீண்டு துறுகல்
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
குன்ற நாட! நின் மொழிவல்; என்றும்,
பயப்ப நீத்தல் என் இவள்
5
கயத்து வளர் குவளையின் அமர்த்த கண்ணே.
வரையாது வந்தொழுகும் தலைமகன் புணர்ந்து நீங்குழி, எதிர்ப்பட்ட தோழி வரைவு கடாயது. 7
 
278
சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்
குரங்கின் வன் பறழ் பாய்ந்தென, இலஞ்சி
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன்
உற்றோர் மறவா நோய் தந்து,
5
கண்டோர் தண்டா நலம் கொண்டனனே!
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 8
 
279
கல் இவர் இற்றி புல்லுவன ஏறிக்
குளவி மேய்ந்த மந்தி துணையொடு
வரைமிசை உகளும் நாட! நீ வரின்,
கல் அகத்தது எம் ஊரே;
5
அம்பல் சேரி அலர் ஆங்கட்டே.
இரவுக்குறி வேண்டும் தலைமகனைத் தோழி வரவு அருமை கூறி மறுத்தது. 9
 
280
கரு விரல் மந்திக் கல்லா வன் பார்ப்பு
இரு வெதிர் ஈர்ங் கழை ஏறி, சிறு கோல்
மதி புடைப்பது போல் தோன்றும் நாட!
வரைந்தனை நீ எனக் கேட்டு யான்
5
 த்தனென்அல்லெனோ அஃது என் யாய்க்கே?
புணர்ந்து உடன்போகிய தலைமகன் தலைமகளைக் கரண வகையான் வரைந்தானாக, எதிர் சென்ற தோழிக்கு, 'இனி யான் இவளை வரைந்தமை நுமர்க்கு உணர்த்த வேண்டும்' என்றானாக, அவள் சொல்லியது. 10
 
மேல்