271 | | அவரை அருந்த மந்தி பகர்வர் | | பக்கின் தோன்றும் நாடன் வேண்டின், | | பசுப்போல் பெண்டிரும் பெறுகுவன்; | | தொல் கேள் ஆகலின், நல்குமால் இவட்கே. | |
| தலைமகன் வரைவுவேண்டிவிடத் தமர் மறுத்துழி, செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 1 | | |
|
|
272 | | கரு விரல் மந்திக் கல்லா வன் பறழ் | | அரு வரைத் தீம் தேன் எடுப்பி, அயலது | | உரு கெழு நெடுஞ் சினைப் பாயும் நாடன் | | இரவின் வருதல் அறியான்; | 5 | 'வரும் வரும்' என்ப தோழி! யாயே. | |
| அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் சிறைப்புறத்தானாக, முன்னை நாள் நிகழ்ந்ததனைத் தோழிக்குச் சொல்லுவாள் போன்று, தலைமகள் சொல்லியது. 2 | | |
|
|
273 | | அத்தச் செயலைத் துப்பு உறழ் ஒண் தளிர் | | புன் தலை மந்தி வன் பறழ் ஆரும் | | நல் மலை நாட! நீ செலின், | | நின் நயந்து உறைவி என்னினும் கலிழ்மே. | |
| வரைவிடை வைத்துப் பிரியும் தலைமகன் 'நின் துணைவியை உடம்படுவித்தேன்; இனி நீயே இதற்கு உடம்படாது கலிழ்கின்றாய்' என்றாற்குத் தோழி கூறியது. 3 | | |
|
|
274 | | மந்திக் கணவன் கல்லாக் கடுவன், | | ஒண் கேழ் வயப்புலி குழுமலின், விரைந்து, உடன் | | குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன் | | சென்றனன் வாழி, தோழி! என் | 5 | மென் தோள் கவினும், பாயலும், கொண்டே. | |
| வரைவிடை வைத்துப் பிரிந்துழி, ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 4 | | |
|
|
275 | | குரங்கின் தலைவன் குரு மயிர்க் கடுவன் | | சூரல்அம் சிறு கோல் கொண்டு, வியல் அறை | | மாரி மொக்குள் புடைக்கும் நாட! | | யாம் நின் நயந்தனம் எனினும், எம் | 5 | ஆய்நலம் வாடுமோ அருளுதி எனினே? | |
| வரையாது வந்தொழுகும் தலைமகன் இடையிட்டு வருதலால், எதிர்ப்பாடு பெறாத தோழி குறியிடத்து எதிர்ப்பட்டு, அவன் கொடுமை கூறி, நெருங்கிச் சொல்லியது. 5 | | |
|
|
276 | | மந்திக் காதலன் முறி மேய் கடுவன் | | தண் கமழ் நறைக் கொடி கொண்டு, வியல் அறைப் | | பொங்கல் இள மழை புடைக்கும் நாட! | | நயவாய்ஆயினும் வரைந்தனை சென்மோ | 5 | கல் முகை வேங்கை மலரும் | | நல் மலை நாடன் பெண்டு எனப் படுத்தே! | |
| வரையாது வந்தொழுகும் தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது. 6 | | |
|
|
277 | | குறவர் முன்றில் மா தீண்டு துறுகல் | | கல்லா மந்தி கடுவனோடு உகளும் | | குன்ற நாட! நின் மொழிவல்; என்றும், | | பயப்ப நீத்தல் என் இவள் | 5 | கயத்து வளர் குவளையின் அமர்த்த கண்ணே. | |
| வரையாது வந்தொழுகும் தலைமகன் புணர்ந்து நீங்குழி, எதிர்ப்பட்ட தோழி வரைவு கடாயது. 7 | | |
|
|
278 | | சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல் | | குரங்கின் வன் பறழ் பாய்ந்தென, இலஞ்சி | | மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன் | | உற்றோர் மறவா நோய் தந்து, | 5 | கண்டோர் தண்டா நலம் கொண்டனனே! | |
| வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 8 | | |
|
|
279 | | கல் இவர் இற்றி புல்லுவன ஏறிக் | | குளவி மேய்ந்த மந்தி துணையொடு | | வரைமிசை உகளும் நாட! நீ வரின், | | கல் அகத்தது எம் ஊரே; | 5 | அம்பல் சேரி அலர் ஆங்கட்டே. | |
| இரவுக்குறி வேண்டும் தலைமகனைத் தோழி வரவு அருமை கூறி மறுத்தது. 9 | | |
|
|
280 | | கரு விரல் மந்திக் கல்லா வன் பார்ப்பு | | இரு வெதிர் ஈர்ங் கழை ஏறி, சிறு கோல் | | மதி புடைப்பது போல் தோன்றும் நாட! | | வரைந்தனை நீ எனக் கேட்டு யான் | 5 | த்தனென்அல்லெனோ அஃது என் யாய்க்கே? | |
| புணர்ந்து உடன்போகிய தலைமகன் தலைமகளைக் கரண வகையான் வரைந்தானாக, எதிர் சென்ற தோழிக்கு, 'இனி யான் இவளை வரைந்தமை நுமர்க்கு உணர்த்த வேண்டும்' என்றானாக, அவள் சொல்லியது. 10 | | |
|
|