281 | | வெள்ள வரம்பின் ஊழி போகியும் | | கிள்ளை வாழிய, பலவே ஒள் இழை | | இரும் பல் கூந்தல் கொடிச்சி | | பெருந் தோள் காவல் காட்டியவ்வே. | |
| ஆயத்தோடு விளையாட்டு விருப்பினால் பொழிலகம் புகுந்த தலைவியை எதிர்ப்பட்டு ஒழுகுகின்ற தலைமகன், அவள் புனங்காவற்கு உரியளாய் நின்றது கண்டு, மகிழ்ந்து சொல்லியது. 1 | | |
|
|
282 | | சாரல் புறத்த பெருங் குரல் சிறு தினைப் | | பேர் அமர் மழைக்கண் கொடிச்சி கடியவும் | | சோலைச் சிறு கிளி உன்னும் நாட! | | ஆர் இருள் பெருகின; வாரல் | 5 | கோட்டு மா வழங்கும் காட்டக நெறியே. | |
| இரவுக்குறி நேர்ந்த தோழி தலைமகன் வந்து புணர்ந்து நீங்குழி, அவனை எதிர்ப்பட்டுச் சொல்லியது. 2 | | |
|
|
283 | | வன்கட் கானவன் மென் சொல் மட மகள் | | புன்புல மயக்கத்து உழுத ஏனல் | | பைம் புறச் சிறு கிளி கடியும் நாட! | | பெரிய கூறி நீப்பினும், | 5 | பொய்வலைப் படூஉம் பெண்டு தவப் பலவே. | |
| தோழி வாயில் மறுக்கவும், தலைமகன் ஆற்றாமை கண்டு, தலைமகள் வாயில் நேர, அவன் பள்ளியிடத்தானாய் இருந்துழிப் புக்க தோழி கூறியது. 3 | | |
|
|
284 | | அளியதாமே, செவ் வாய்ப் பைங் கிளி | | குன்றக் குறவர் கொய் தினைப் பைங் கால் | | இருவி நீள்புனம் கண்டும். | | பிரிதல் தேற்றாப் பேர் அன்பினவே. | |
| தினை அரிந்துழி, கிளியை நோக்கிக் கூறுவாள் போல், சிறைப்புறமாக ஒம்படுத்தது. 4 | | |
|
|
285 | | பின் இருங் கூந்தல் நல் நுதல் குறமகள் | | மென் தினை நுவணை உண்டு, தட்டையின் | | ஐவனச் சிறு கிளி கடியும் நாட! | | வீங்குவளை நெகிழப் பிரிதல் | 5 | யாங்கு வல்லுநையோ, ஈங்கு இவள் துறந்தே? | |
| ஒருவழித் தணந்து வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 5 | | |
|
|
286 | | சிறு தினை கொய்த இருவி வெண் கால் | | காய்த்த அவரைப் படு கிளி கடியும் | | யாணர் ஆகிய நல் மலை நாடன் | | புகர் இன்று நயந்தனன் போலும்; | 5 | கவரும் தோழி! என் மாமைக் கவினே. | |
| உடன்போக்குத் துணிந்த தலைமகன் அஃது ஒழிந்து, தானே வரைவிடை வைத்துப் பிரிய நினைந்ததனைக் குறிப்பினான் உணர்ந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகன், 'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்றவழித் தலைமகள் தோழிக்குச் சொல்ல | | |
|
|
287 | | நெடு வரை மிசையது குறுங் கால் வருடை | | தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட! | | வல்லை மன்ற பொய்த்தல்; | | வல்லாய் மன்ற, நீ அல்லது செயலே. | |
| 'இன்ன நாளில் வரைவல்' எனக் கூறி, அந்நாளில் வரையாது, பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது. 7 | | |
|
|
288 | | நன்றே செய்த உதவி நன்று தெரிந்து | | யாம் எவன் செய்குவம்? நெஞ்சே! காமர் | | மெல் இயல் கொடிச்சி காப்பப் | | பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே. | |
| 'கிளிகள் புனத்தின்கண் படியாநின்றன' என்று, தலைவியைக் காக்க ஏவியவழி, அதனை அறிந்த தலைமகன் உவந்து, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 8 | | |
|
|
289 | | 'கொடிச்சி இன் குரல் கிளி செத்து, அடுக்கத்துப் | | பைங் குரல் ஏனல் படர்தரும் கிளி' எனக் | | காவலும் கடியுநர் போல்வர் | | மால் வரை நாட! வரைந்தனை கொண்மோ! | |
| இற்செறித்த பின்னர்த் தோழி வரைவு கடாவுழி, 'முதிர்ந்த தினைப்புனம் இவள் காத்தொழிந்தால் வரைவல்' என்றாற்கு அவள் சொல்லியது. 9 | | |
|
|
290 | | அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி | | சிறந்தன போலும், கிள்ளை பிறங்கிய | | பூக் கமழ் கூந்தல் கொடிச்சி | | நோக்கவும் படும்; அவள் ஓப்பவும் படுமே. | |
| காவல் மிகுதியான் இரவுக்குறி மறுக்கப்பட்டு நீங்கிய தலைமகன் வந்துழி, அவன் கேட்டு வெறுப்புத் தீர்த்தற் பொருட்டால், தினைப்புனம் காவல் தொடங்காநின்றாள் என்பது தோன்ற, தோழி கூறியது. 10 | | |
|
|