தொடக்கம்   முகப்பு
31 - 40 தோழிக்குரைத்தபத்து
31
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
கடன் அன்று என்னும் கொல்லோ நம் ஊர்
முடம் முதிர் மருதத்துப் பெருந் துறை
உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே?
முன் ஒரு நாள் தன்னோடு புதுப்புனல் ஆடுழி, 'இனிப் புறத்தொழுக்கம் விரும்பேன்' என ஆயத்தாரோடு சூளுற்ற தலைமகன் பின்பும் பரத்தையரோடு புனலாடத் தொடங்குகின்றான் என்பது கேட்ட தலைமகள், அவன் உழையர் கேட்ப, தோழிக்குச் சொல்லியது.
32
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு, எழு நாள்
அழுப என்ப, அவன் பெண்டிர்
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே.
வாயில் வேண்டிப் புகுந்தார் கேட்பத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2
33
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
மருது உயர்ந்து ஓங்கிய விரி பூம் பெருந் துறை,
பெண்டிரொடு ஆடும் என்ப தன்
தண் தார் அகலம் தலைத்தலைக் கொளவே.
இதுவும் அது. 3
34
அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப்
பொய்கைப் பூத்த, புழைக் கால் ஆம்பல்
தாது ஏர் வண்ணம் கொண்டன
ஏதிலாளர்க்குப் பசந்த என் கண்ணே.
இதுவும் அது. 4
393
துறந்ததற் கொண்டு துயர் அடச் சாஅய்,
அறம் புலந்து பழிக்கும் அளைகணாட்டி!
எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக
வந்தனளோ நின் மட மகள்
5
வெந் திறல் வெள் வேல் விடலை முந்துறவே?
உடன்போய்த் தலைமகள் மீண்டு வந்துழி, அயலோர் அவள் தாய்க்குச் சொல்லியது. 3
 
395
முளி வயிர்ப் பிறந்த, வளி வளர் கூர் எரிச்
சுடர் விடு நெடுங் கொடி விடர் முகை முழங்கும்
இன்னா அருஞ் சுரம் தீர்ந்தனம்; மென்மெல
ஏகுமதி வாழியோ, குறுமகள்! போது கலந்து
5
கறங்கு இசை அருவி வீழும்,
பிறங்கு இருஞ் சோலை, நம் மலை கெழு நாட்டே.
உடன்போய் மீள்கின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது. 5
 
397
'கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியும்
சுரம் நனி வாராநின்றனள்' என்பது
முன்னுற விரைந்த நீர்  மின்
5
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே.
உடன்போய் மீள்கின்ற தலைமகள் தன் ஊர்க்குச் சொல்கின்றாரைக் கண்டு கூறியது. 7
 
399
'நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம் மனை வதுவை நல் மணம் கழிக' எனச்
சொல்லின் எவனோ மற்றே வென் வேல்,
மை அற விளங்கிய கழல்அடி,
5
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே?
உடன் கொண்டுபோன தலைமகன் மீண்டு தலைவியைத் தன் இல்லத்துக்கொண்டு புக்குழி, 'அவன் தாய் அவட்குச் சிலம்பு கழி நோன்பு செய்கின்றாள்' எனக் கேட்ட நற்றாய் ஆண்டுநின்றும் வந்தார்க்குச் சொல்லியது. 9
 
401
மறி இடைப்படுத்த மான் பிணை போல,
புதல்வன் நடுவணன் ஆக, நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை; முனிவு இன்றி
நீல் நிற வியலகம் கவைஇய
5
ஈனும், உம்பரும், பெறலருங்குரைத்தே.
கடிமனைச் சென்றுவந்த செவிலி உவந்த உள்ளத்தளாய் நற்றாய்க்குச் சொல்லியது.
 
மேல்