311 | | வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும், | | ஆர் இடைச் செல்வோர் ஆறு நனி வெரூஉம் | | காடு இறந்தனரே காதலர்; | | 'நீடுவர்கொல்' என நினையும், என் நெஞ்சே! | |
| 'ஆற்றது அருமை நினைந்து, நீ ஆற்றாயாதல் வேண்ட; அவர் அவ்வழி முடியச் சென்றார்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 1 | | |
|
|
312 | | அறம் சாலியரோ! அறம் சாலியரோ! | | வறன் உண்டாயினும், அறம் சாலியரோ! | | வாள் வனப்பு உற்ற அருவிக் | | கோள் வல் என்னையை மறைத்த குன்றே. | |
| உடன்போயின தலைமகள் மீண்டு வந்துழி, 'நின் ஐயன்மார் பின் துரந்து வந்த இடத்து நிகழ்ந்தது என்னை?' என்ற தோழிக்கு நிகழ்ந்தது கூறி, தலைமகன் மறைதற்கு உதவி செய்த மலையை வாழ்த்தியது. 2 | | |
|
|
313 | | தெறுவது அம்ம, நும் மகள் விருப்பே | | உறு துயர் அவலமொடு உயிர் செலச் சாஅய், | | பாழ்படு நெஞ்சம் படர் அடக் கலங்க, | | நாடு இடை விலங்கிய வைப்பின் | 5 | காடு இறந்தனள், நம் காதலோளே! | |
| தலைமகள் புணர்ந்து உடன்போகியவழி, செவிலி ஆற்றாமை கண்ட நற்றாய் அவட்குச் சொல்லியது. 3 | | |
|
|
314 | | 'அவிர் தொடி கொட்ப, கழுது புகவு அயர, | | கருங் கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவ, | | சிறு கண் யானை ஆள் வீழ்த்துத் திரிதரும் | | நீள் இடை அருஞ் சுரம்' என்ப நம் | 5 | தோள் இடை முனிநர் சென்ற ஆறே. | |
| தலைமகன் பிரிந்துழி, அவனுடன் போய் மீண்டார் வழியது அருமை தங்களில் கூறக் கேட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4 | | |
|
|
315 | | பாயல் கொண்ட பனி மலர் நெடுங் கண் | | பூசல் கேளார் சேயர் என்ப | | இழை நெகிழ் செல்லல் உறீஇ, | | கழை முதிர் சோலைக் காடு இறந்தோரே. | |
| சொல்லாது தலைமகன் பிரிந்துழி, தலைமகள் வேறுபாடு கண்ட தோழி இரங்கிச் சொல்லியது. 5 | | |
|
|
316 | | பொன் செய் பாண்டில் பொலங்கலம் நந்த, | | தேர் அகல் அல்குல் அவ் வரி வாட, | | இறந்தோர்மன்ற தாமே பிறங்கு மலைப் | | புல் அரை ஓமை நீடிய | 5 | புலி வழங்கு அதர கானத்தானே. | |
| தலைமகள் மெலிவுக்கு நொந்து, தலைமகன் பிரிவின்கண் தோழி கூறியது. 6 | | |
|
|
492 | | நின்னே போலும் மஞ்ஞை ஆல, நின் | | நல் நுதல் நாறும் முல்லை மலர, | | நின்னே போல மா மருண்டு நோக்க, | | நின்னே உள்ளி வந்தனென் | 5 | நல் நுதல் அரிவை! காரினும் விரைந்தே. | |
|
|
|
494 | | வண்டு தாது ஊத, தேரை தெவிட்ட, | | தண் கமழ் புறவின் முல்லை மலர, | | இன்புறுத்தன்று பொழுதே; | | நின் குறி வாய்த்தனம்; தீர்க, இனிப் படரே! | |
|
|
|
496 | | மா புதல் சேர, வரகு இணர் சிறப்ப | | மா மலை புலம்ப, கார் கலித்து அலைப்ப, | | பேர் அமர்க் கண்ணி! நிற் பிரிந்து உறைநர் | | தோள் துணையாக வந்தனர்; | 5 | போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே. | |
| குறித்த பருவத்தின்கண் தலைமகன் வந்துழி, தோழி தலைமகட்குச் சொல்லியது. 6 | | |
|
|
498 | | தோள் கவின் எய்தின; தொடி நிலை நின்றன; | | நீள் வரி நெடுங் கண் வாள் வனப்பு உற்றன | | ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டென, | | விரை செலல் நெடுந் தேர் கடைஇ, | 5 | வரையக நாடன் வந்தமாறே. | |
|
|
|
500 | | கொன்றைப் பூவின் பசந்த உண்கண், | | குன்றக நெடுஞ் சுனைக் குவளை போல, | | தொல் கவின் பெற்றன இவட்கே வெல் போர் | | வியல் நெடும் பாசறை நீடிய | 5 | வய மான் தோன்றல் நீ! வந்தமாறே. | |
|
|
|