331 | | அம்ம வாழி, தோழி! அவிழ் இணர்க் | | கருங் கால் மராஅத்து வைகு சினை வான் பூ | | அருஞ் சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள, | | இனிய கமழும் வெற்பின் | 5 | இன்னாது என்ப, அவர் சென்ற ஆறே. | |
| தலைமகன் பிரிந்துழி, 'செல்லும் வழியிடத்து மலையின் உளதாகிய நாற்றத்தால் நம்மை நினைத்து முடியச் செல்லார், மீள்வரோ?' எனக் கேட்ட தலைவிக்கு, 'அவர் முடியச் சென்றார்' என்பது அறிந்து, இரங்கித் தோழி கூறியது. 1 | | |
|
|
332 | | அம்ம வாழி, தோழி! என்னதூஉம் | | அறன் இல மன்ற தாமே விறல் மிசைக் | | குன்று கெழு கானத்த பண்பு இல் மாக் கணம், | | 'கொடிதே காதலிப் பிரிதல்; | 5 | செல்லல், ஐய! என்னாதவ்வே. | |
| பிரிந்த தலைமகன், 'சுரத்திடைக் கழியச் சென்றான்' என்பது கேட்ட தலைமகள் அங்குள்ள மாக்களை நொந்து, தோழிக்குச் சொல்லியது. 2 | | |
|
|
333 | | அம்ம வாழி, தோழி! யாவதும் | | வல்லா கொல்லோ தாமே அவண | | கல்லுடை நல் நாட்டுப் புள்ளினப் பெருந் தோடு, | | 'யாஅம் துணை புணர்ந்து உறைதும்; | 5 | யாங்குப் பிரிந்து உறைதி!' என்னாதவ்வே? | |
| புட்களை நொந்து சொல்லியது. 3 | | |
|
|
334 | | அம்ம வாழி, தோழி! சிறியிலை | | நெல்லி நீடிய கல் காய் கடத்திடை, | | பேதை நெஞ்சம் பின் செல, சென்றோர் | | கல்லினும் வலியர் மன்ற | 5 | பல் இதழ் உண்கண் அழப் பிரிந்தோரே. | |
| பிரிவு நீட ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4 | | |
|
|
335 | | அம்ம வாழி, தோழி! நம்வயின் | | நெய்த்தோர் அன்ன செவிய எருவை | | கற்புடை மருங்கில் கடு முடை பார்க்கும் | | காடு நனி கடிய என்ப | 5 | நீடி இவண் வருநர் சென்ற ஆறே. | |
| தலைமகன் சென்ற சுரத்தினிடத்துக் கொடுமை பிறர் கூறக்கேட்ட தலைமகள் ஆற்றாது தோழிக்குச் சொல்லியது. 5 | | |
|
|
336 | | அம்ம வாழி, தோழி! நம்வயின் | | பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற | | நின்றது இல் பொருள் பிணி முற்றிய | | என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே. | |
| பிரிவதற்கு முன்பு தங்களுடன் அவன் ஒழுகிய திறம் நினைந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 6 | | |
|
|
337 | | அம்ம வாழி, தோழி! நம்வயின் | | மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும் | | இனிய மன்ற தாமே | | பனி இருங் குன்றம் சென்றோர்க்குப் பொருளே. | |
| தலைமகன் பொருள்வயிற் பிரிந்துழி, தன் முயக்கினும் அவற்குப் பிற்காலத்துப் பொருள் சிறந்தது எனத் தலைவி இரங்கித் தோழிக்குச் சொல்லியது. 7 | | |
|
|
338 | | அம்ம வாழி, தோழி! சாரல் | | இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம் | | மலை உறு தீயின் சுரமுதல் தோன்றும் | | பிரிவு அருங் காலையும், பிரிதல் | 5 | அரிது வல்லுநர் நம் காதலோரே. | |
| தலைமகன் பிரிந்துழி. 'இக் காலத்தே பிரிந்தார்' எனத் தலைமகள் இரங்கிச் சொல்லியது. 8 | | |
|
|
339 | | அம்ம வாழி, தோழி! சிறியிலைக் | | குறுஞ் சினை வேம்பின் நறும் பழம் உணீஇய | | வாவல் உகக்கும் மாலையும் | | இன்றுகொல், தோழி! அவர் சென்ற நாட்டே? | |
| தலைமகன் குறித்த பருவ வரவின்கண் மாலைப் பொழுது கண்டு, ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9 | | |
|
|
340 | | அம்ம வாழி, தோழி! காதலர் | | உள்ளார்கொல்? நாம் மருள் உற்றனம்கொல்? | | விட்டுச் சென்றனர் நம்மே | | தட்டைத் தீயின் ஊர் அலர் எழவே. | |
| தலைமகள் பிரிந்துழி, 'கடிதின் வருவர்' என ஆற்றியிருந்த தலைவி, அவன் நீட்டித்துழி, ஆற்றாது தோழிக்குச் சொல்லியது. 10 | | |
|
|