தொடக்கம்   முகப்பு
351 - 360 வரவுரைத்தபத்து
351
அத்தப் பலவின் வெயில் தின் சிறு காய்,
அருஞ் சுரம் செல்வோர், அருந்தினர் கழியும்
காடு பின் ஒழிய வந்தனர்; தீர்க, இனி
பல் இதழ் உண்கண் மடந்தை! நின்
5
நல் எழில் அல்குல் வாடிய நிலையே.
பிரிந்த தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 1
352
விழுத் தொடை மறவர் வில் இடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப்
பெருங் கை யானை இருஞ் சினம் உறைக்கும்
வெஞ் சுரம் 'அரிய' என்னார்,
5
வந்தனர் தோழி! நம் காதலோரே!
இதுவும் அது. 2
353
எரிக் கொடி கவைஇய செவ் வரை போலச்
சுடர்ப் பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம்
நீ இனிது முயங்க, வந்தனர்
மா இருஞ் சோலை மலை இறந்தோரே.
இதுவும் அது. 3
354
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை
மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும்
அரிய சுரன் வந்தனரே
தெரிஇழை அரிவை! நின் பண்பு தர விரைந்தே.
இதுவும் அது. 4
355
திருந்துஇழை அரிவை! நின் நலம் உள்ளி,
'அருஞ் செயல் பொருள்பிணி பெருந் திரு உறுக!' எனச்
சொல்லாது பெயர் தந்தேனே பல் பொறிச்
சிறு கண் யானை திரிதரும்
5
நெறி விலங்கு அதர கானத்தானே.
நினைந்த எல்லையளவும் பொருள் முற்றி நில்லாது, பெற்ற பொருள் கொண்டு, தலைவியை நினைந்து, மீண்ட தலைமகன் அவட்குச் சொல்லியது. 5
356
உள்ளுதற்கு இனியமன்ற செல்வர்
யானை பிணித்த பொன் புனை கயிற்றின்,
ஒள் எரி மேய்ந்த சுரத்திடை
உள்ளம் வாங்க, தந்த நின் குணனே.
வினை முற்றி மீண்டு வந்த தலைமகன் தலைவிக்கு அவள் குணம் புகழ்ந்து கூறியது. 6
123
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
ஒண் நுதல் ஆயம் ஆர்ப்ப,
தண்ணென் பெருல் கடல் திரை பாய்வோளே! 3
125
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
தெண் திரை பாவை வௌவ,
உண்கண் சிவப்ப அழுது நின்றோளே! 5
127
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
தும்பை மாலை இள முலை
நுண் பூண் ஆகம் விலங்குவோளே! 7
129
,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,
(இந்தப் பாடல் கிடைக்கப்பெறவில்லை) 9
383
கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற
நெடுங் கால் மராஅத்துக் குறுஞ் சினை பற்றி,
வலம் சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற
மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே
5
பைஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும்
அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே.
உடன்போகிய தலைமகள் தலைமகன் வளைத்த கொம்பிற் பூக்கொண்டு தனக்கும் பாவைக்கும் வகுக்க, கண்டார் கூறியது. 3
 
385
'கடுங்கண் காளையொடு நெடுந் தேர் ஏறி,
கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய,
வேறு பல் அருஞ் சுரம் இறந்தனள் அவள்' எனக்
கூறுமின் வாழியோ! ஆறு செல் மாக்கள்!
5
நல் தோள் நயந்து பாராட்டி,
எற் கெடுத்து இருந்த அறன் இல் யாய்க்கே.
வரைவு மறுத்துழி, உடன்போய தலைமகள் இடைச் சுரத்துக் கண்டாரை, 'யான் போகின்ற படியை யாய்க்கு நீர் கூற வேண்டும்' எனச் சொல்லியது. 5
 
388
நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக்
கருங் கால் யாத்து வரி நிழல் இரீஇ,
சிறு வரை இறப்பின், காண்குவை செறிதொடிப்
பொன் ஏர் மேனி மடந்தையொடு
5
வென் வேல் விடலை முன்னிய சுரனே.
தேடிச் சென்ற செவிலிக்கு இடைச் சுரத்துக் கண்டார் அவளைக் கண்ட திறம் கூறியது. 8
 
மேல்