தொடக்கம்   முகப்பு
361 - 370 முன்னிலைப்பத்து
361
உயர்கரைக் கான் யாற்று அவிர்மணல் அகன்துறை
வேனில் பாதிரி விரி மலர் குவைஇத்
தொடலை தைஇய மடவரல் மகளே!
கண்ணினும் கதவ, நின் முலையே!
5
முலையினும் கதவ, நின் தட மென் தோளே!
புணர்ந்து உடன்போகிய தலைமகன் இடைச்சுரத்துக்கண் விளையாட்டு வகையால் பூத்தொடுக்கின்ற தலைமகளைக் கண்டு புகழ, அவள் அதற்கு நாணி, கண்புதைத்த வழிச் சொல்லியது. 1
 
362
பதுக்கைத்து ஆய ஒதுக்கு அருங் கவலை,
சிறு கண் யானை உறு பகை நினையாது,
யாங்கு வந்தனையோ பூந் தார் மார்ப!
அருள் புரி நெஞ்சம் உய்த்தர
5
இருள் பொர நின்ற இரவினானே?
சேணிடைப் பிரிந்த தலைமகன் இடைநிலத்துத் தங்காது இரவின்கண் வந்துழித் தோழி சொல்லியது. 2
 
363
சிலை வில் பகழிச் செந் துவர் ஆடைக்
கொலை வில் எயினர் தங்கை! நின் முலைய
சுணங்கு என நினைதி நீயே;
அணங்கு என நினையும், என் அணங்குறு நெஞ்சே.
புணர்ந்து உடன் செல்கின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலைமகளை நலம் பாராட்டியது. 3
 
443
நனி சேய்த்து என்னாது, நற்றேர் ஏறிச் சென்று,
இலங்கு நிலவின் இளம் பிறை போலக்
காண்குவெம் தில்ல, அவள் கவின் பெறு சுடர் நுதல்
விண் உயர் அரண் பல வௌவிய
5
மண்ணுறு முரசின் வேந்து தொழில் விடினே.
இதுவும் அது. 3
 
51
நீர் உறை கோழி நீலச் சேவல்
கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர!
புளிங்காய் வேட்கைத்து அன்று, நின்
மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே.
வாயில் பெற்றுப் புகுந்து போய்ப் புறத்தொழுக்கம் ஒழுகி, பின்பும் வாயில் வேண்டும் தலைமகற்குத் தோழி மறுத்தது. 1
54
திண் தேர்த் தென்னவன் நல் நாட்டு உள்ளதை
வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும்
தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ,
ஊரின் ஊரனை நீ தர, வந்த
5
பைஞ்சாய்க் கோதை மகளிர்க்கு
அஞ்சுவல், அம்ம! அம் முறை வரினே.
வாயில் வேண்டிவந்த தலைமகற்குத் தலைமகள் குறிப்பு அறிந்த தோழி, அவன் கொடுமை கூறி, வாயில் மறுத்தது. 4
58
விண்டு அன்ன வெண்ணெல் போர்வின்,
கை வண் விராஅன், இருப்பை அன்ன
இவள் அணங்குற்றனை போறி;
பிறர்க்கும் அனையையால்; வாழி நீயே!
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் புலந்த தலைமகற்குத் தோழி கூறியது. 8
246
வெறி செறித்தனனே, வேலன் கறிய
கல் முகை வயப் புலி கழங்கு மெய்ப்படூஉ,
..................................................................................................................
மெய்ம்மை அன்ன பெண்பாற் புணர்ந்து,
5
மன்றில் பையுள் தீரும்
குன்ற நாடன் உறீஇய நோயே.
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாய் நின்றுழி, அவன் கேட்குமாற்றால் வெறி நிகழாநின்றமை தோழி தலைமகட்குச் சொல்லியது. 6
 
249
பெய்ம்மணல் வரைப்பில் கழங்கு படுத்து, அன்னைக்கு,
'முருகு' என மொழியும் வேலன்; மற்று அவன்
வாழிய இலங்கும் அருவிச்
சூர் மலை நாடனை அறியாதோனே!
வேலன் கூறிய மாற்றத்தை மெய்யெனக் கொண்ட தாய் கேட்பத் தலைமகட்குத் தோழி கூறியது. 9
 
251
குன்றக் குறவன் ஆர்ப்பின், எழிலி
நுண் பல் அழி துளி பொழியும் நாட!
நெடு வரைப் படப்பை நும் ஊர்க்
கடு வரல் அருவி காணினும் அழுமே.
வரையாது வந்தொழுகும் தலைமகற்கு வரைவு வேட்ட தோழி கூறியது. 1
 
மேல்