361 | | உயர்கரைக் கான் யாற்று அவிர்மணல் அகன்துறை | | வேனில் பாதிரி விரி மலர் குவைஇத் | | தொடலை தைஇய மடவரல் மகளே! | | கண்ணினும் கதவ, நின் முலையே! | 5 | முலையினும் கதவ, நின் தட மென் தோளே! | |
| புணர்ந்து உடன்போகிய தலைமகன் இடைச்சுரத்துக்கண் விளையாட்டு வகையால் பூத்தொடுக்கின்ற தலைமகளைக் கண்டு புகழ, அவள் அதற்கு நாணி, கண்புதைத்த வழிச் சொல்லியது. 1 | | |
|
|
362 | | பதுக்கைத்து ஆய ஒதுக்கு அருங் கவலை, | | சிறு கண் யானை உறு பகை நினையாது, | | யாங்கு வந்தனையோ பூந் தார் மார்ப! | | அருள் புரி நெஞ்சம் உய்த்தர | 5 | இருள் பொர நின்ற இரவினானே? | |
| சேணிடைப் பிரிந்த தலைமகன் இடைநிலத்துத் தங்காது இரவின்கண் வந்துழித் தோழி சொல்லியது. 2 | | |
|
|
363 | | சிலை வில் பகழிச் செந் துவர் ஆடைக் | | கொலை வில் எயினர் தங்கை! நின் முலைய | | சுணங்கு என நினைதி நீயே; | | அணங்கு என நினையும், என் அணங்குறு நெஞ்சே. | |
| புணர்ந்து உடன் செல்கின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலைமகளை நலம் பாராட்டியது. 3 | | |
|
|
364 | | முளவு மா வல்சி எயினர் தங்கை | | இளமா எயிற்றிக்கு, நின் நிலை அறியச் | | சொல்லினென் இரக்கும்அளவை | | வென் வேல் விடலை! விரையாதீமே! | |
| உடன்போக்கு நயந்த தலைமகன் அதனைத் தோழிக்கு உணர்த்த, அவள் முடிப்பாளாய்ச் சொல்லியது. 4 | | |
|
|
365 | | கண மா தொலைச்சித் தன்னையர் தந்த | | நிண ஊன் வல்சிப் படு புள் ஓப்பும் | | நலம் மாண் எயிற்றி போலப் பல மிகு | | நன்னல நயவரவு உடையை | 5 | என் நோற்றனையோ? மாவின் தளிரே! | |
| வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்றான் இடைச்சுரத்துக் குழைத்த மாவின் தளிர் கண்டு சொல்லியது. 5 | | |
|
|
366 | | அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! 'என் தோழி | | பசந்தனள் பெரிது' எனச் சிவந்த கண்ணை, | | கொன்னே கடவுதி ஆயின், என்னதூஉம், | | அறிய ஆகுமோ மற்றே | 5 | முறி இணர்க் கோங்கம் பயந்தமாறே? | |
| தலைமகளை நோக்கி, 'இவ் வேறுபாடு எற்றினான் ஆயிற்று?' என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 6 | | |
|
|
367 | | பொரி அரைக் கோங்கின் பொன் மருள் பசு வீ, | | விரிஇணர் வேங்கையொடு, வேறு பட மிலைச்சி, | | விரவு மலர் அணிந்த வேனில் கான் யாற்றுத் | | தேரொடு குறுக வந்தோன் | 5 | பேரொடு புணர்ந்தன்று அன்னை! இவள் உயிரே. | |
| நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 7 | | |
|
|
368 | | எரிப் பூ இலவத்து ஊழ் கழி பல் மலர் | | பொரிப் பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும் | | தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி | | எம்மொடு கொண்மோ, பெரும! நின் | 5 | அம் மெல்லோதி அழிவிலள் எனினே! | |
| 'வேனிற்காலத்து நும்மொடு விளையாட்டு நுகர வருவல்' என்று, பருவம் குறித்துப் பிரியலுற்ற தலைமகற்குத் தோழி கூறியது. 8 | | |
|
|
369 | | வள மலர் ததைந்த வண்டு படு நறும் பொழில் | | முளை நிரை முறுவல் ஒருத்தியொடு, நெருநல் | | குறி நீ செய்தனை என்ப; அலரே, | | குரவ நீள் சினை உறையும் | 5 | பருவ மாக் குயில் கௌவையின், பெரிதே! | |
| பரத்தை ஒருத்தியுடன் பொழிலகத்துத் தங்கி வந்த தலைமகன் தலைமகள் வினாயவழி, 'யாரையும் அறியேன்' என்றானாக, அவள் கூறியது. 9 | | |
|
|
370 | | வண் சினைக் கோங்கின் தண் கமழ் படலை | | இருஞ் சிறை வண்டின் பெருங் கிளை மொய்ப்ப, | | நீ நயந்து உறையப்பட்டோள் | | யாவளோ? எம் மறையாதீமே. | |
| பரத்தைஒருத்திக்குப் பூ அணிந்தான் என்பது கேட்ட தலைமகள், 'அஃது இல்லை' என்று மறைக்கும் தலைமகற்குக் கூறியது. 10 | | |
|
|