361 | | உயர்கரைக் கான் யாற்று அவிர்மணல் அகன்துறை | | வேனில் பாதிரி விரி மலர் குவைஇத் | | தொடலை தைஇய மடவரல் மகளே! | | கண்ணினும் கதவ, நின் முலையே! | 5 | முலையினும் கதவ, நின் தட மென் தோளே! | |
| புணர்ந்து உடன்போகிய தலைமகன் இடைச்சுரத்துக்கண் விளையாட்டு வகையால் பூத்தொடுக்கின்ற தலைமகளைக் கண்டு புகழ, அவள் அதற்கு நாணி, கண்புதைத்த வழிச் சொல்லியது. 1 | | |
|
|
362 | | பதுக்கைத்து ஆய ஒதுக்கு அருங் கவலை, | | சிறு கண் யானை உறு பகை நினையாது, | | யாங்கு வந்தனையோ பூந் தார் மார்ப! | | அருள் புரி நெஞ்சம் உய்த்தர | 5 | இருள் பொர நின்ற இரவினானே? | |
| சேணிடைப் பிரிந்த தலைமகன் இடைநிலத்துத் தங்காது இரவின்கண் வந்துழித் தோழி சொல்லியது. 2 | | |
|
|
363 | | சிலை வில் பகழிச் செந் துவர் ஆடைக் | | கொலை வில் எயினர் தங்கை! நின் முலைய | | சுணங்கு என நினைதி நீயே; | | அணங்கு என நினையும், என் அணங்குறு நெஞ்சே. | |
| புணர்ந்து உடன் செல்கின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலைமகளை நலம் பாராட்டியது. 3 | | |
|
|
443 | | நனி சேய்த்து என்னாது, நற்றேர் ஏறிச் சென்று, | | இலங்கு நிலவின் இளம் பிறை போலக் | | காண்குவெம் தில்ல, அவள் கவின் பெறு சுடர் நுதல் | | விண் உயர் அரண் பல வௌவிய | 5 | மண்ணுறு முரசின் வேந்து தொழில் விடினே. | |
|
|
|
51 | | நீர் உறை கோழி நீலச் சேவல் | | கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர! | | புளிங்காய் வேட்கைத்து அன்று, நின் | | மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே. | |
| வாயில் பெற்றுப் புகுந்து போய்ப் புறத்தொழுக்கம் ஒழுகி, பின்பும் வாயில் வேண்டும் தலைமகற்குத் தோழி மறுத்தது. 1 | | |
|
|
54 | | திண் தேர்த் தென்னவன் நல் நாட்டு உள்ளதை | | வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும் | | தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ, | | ஊரின் ஊரனை நீ தர, வந்த | 5 | பைஞ்சாய்க் கோதை மகளிர்க்கு | | அஞ்சுவல், அம்ம! அம் முறை வரினே. | |
| வாயில் வேண்டிவந்த தலைமகற்குத் தலைமகள் குறிப்பு அறிந்த தோழி, அவன் கொடுமை கூறி, வாயில் மறுத்தது. 4 | | |
|
|
58 | | விண்டு அன்ன வெண்ணெல் போர்வின், | | கை வண் விராஅன், இருப்பை அன்ன | | இவள் அணங்குற்றனை போறி; | | பிறர்க்கும் அனையையால்; வாழி நீயே! | | உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் புலந்த தலைமகற்குத் தோழி கூறியது. 8 | | |
|
|
246 | | வெறி செறித்தனனே, வேலன் கறிய | | கல் முகை வயப் புலி கழங்கு மெய்ப்படூஉ, | | .................................................................................................................. | | மெய்ம்மை அன்ன பெண்பாற் புணர்ந்து, | 5 | மன்றில் பையுள் தீரும் | | குன்ற நாடன் உறீஇய நோயே. | |
| வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாய் நின்றுழி, அவன் கேட்குமாற்றால் வெறி நிகழாநின்றமை தோழி தலைமகட்குச் சொல்லியது. 6 | | |
|
|
249 | | பெய்ம்மணல் வரைப்பில் கழங்கு படுத்து, அன்னைக்கு, | | 'முருகு' என மொழியும் வேலன்; மற்று அவன் | | வாழிய இலங்கும் அருவிச் | | சூர் மலை நாடனை அறியாதோனே! | |
| வேலன் கூறிய மாற்றத்தை மெய்யெனக் கொண்ட தாய் கேட்பத் தலைமகட்குத் தோழி கூறியது. 9 | | |
|
|
251 | | குன்றக் குறவன் ஆர்ப்பின், எழிலி | | நுண் பல் அழி துளி பொழியும் நாட! | | நெடு வரைப் படப்பை நும் ஊர்க் | | கடு வரல் அருவி காணினும் அழுமே. | |
| வரையாது வந்தொழுகும் தலைமகற்கு வரைவு வேட்ட தோழி கூறியது. 1 | | |
|
|