371 | | மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் | | உயர் நெடுங் குன்றம் படு மழை தலைஇச் | | சுரம் நனி இனிய ஆகுக தில்ல | | 'அறநெறி இது' எனத் தெளிந்த என் | |
| பிறை நுதல் குறுமகள் போகிய சுரனே! 1 | | |
|
|
372 | | என்னும் உள்ளினள்கொல்லோ தன்னை | | நெஞ்சு உணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு, | | அழுங்கல் மூதூர் அலர் எழ, | |
| செழும் பல் குன்றம் இறந்த என் மகளே? 2 | | |
|
|
373 | | நினைத்தொறும் கலிழும் இடும்பை எய்துக | | புலிக் கோள் பிழைத்த கவைக் கோட்டு முது கலை | | மான்பிணை அணைதர, ஆண் குரல் விளிக்கும் | | வெஞ் சுரம் என் மகள் உய்த்த | 5 | அம்பு அமை வல் வில் விடலை தாயே! | |
| தலைமகளைத் தலைமகன் கொண்டு கழிந்த கொடுமை நினைந்து, நற்றாய் சொல்லியது. 3 | | |
|
|
374 | | பல் ஊழ் நினைப்பினும், நல்லென்று ஊழ | | மீளி முன்பின் காளை காப்ப, | | முடி அகம் புகாஅக் கூந்தலள் | | கடுவனும் அறியாக் காடு இறந்தோளே. | |
| தலைமகள் உடன்போயவழி, அவள் இளமை நினைந்து இரங்கித் தாய் கூறியது. 4 | | |
|
|
375 | | 'இது என் பாவைக்கு இனிய நன் பாவை; | | இது என் பைங்கிளி எடுத்த பைங்கிளி; | | இது என் பூவைக்கு இனிய சொல் பூவை' என்று, | | அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல் | 5 | காண்தொறும் காண்தொறும் கலங்க, | | நீங்கினளோ என் பூங் கணோளே? | |
| சேரியும் அயலும் தேடிக் காணாது வந்தாரைக் கண்டு தலைமகள் தாய் சொல்லியது. 5 | | |
|
|
376 | | நாள்தொறும் கலிழும் என்னினும் இடை நின்று | | காடு படு தீயின் கனலியர் மாதோ | | நல் வினை நெடு நகர் கல்லெனக் கலங்க, | | பூப் புரை உண்கண் மடவரல் | 5 | போக்கிய புணர்த்த அறன் இல் பாலே! | |
| தலைமகள் போயவழி, நற்றாய் விதியை வெகுண்டு சொல்லியது. 6 | | |
|
|
377 | | நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை | | இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் | | சென்றனள் மன்ற, என் மகளே | | பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே. | |
| தலைமகள் உடன்போயவழி, அவள் பந்து முதலாகிய கண்ட நற்றாய் கலங்கிச் சொல்லியது. 7 | | |
|
|
378 | | செல்லிய முயலிப் பாஅய சிறகர் | | வாவல் உகக்கும் மாலை, யாம் புலம்பப் | | போகிய அவட்கோ நோவேன்; தே மொழித் | | துணை இலள் கலிழும் நெஞ்சின் | 5 | இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுவே. | |
| தலைமகள் உடன்போயவழி, அவள் தோழி ஆற்றாமை கண்ட நற்றாய் சொல்லியது. 8 | | |
|
|
379 | | தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின் | | இனிது ஆம்கொல்லோ தனக்கே பனி வரை | | இனக் களிறு வழங்கும் சோலை | | வயக்குறு வெள் வேலவற் புணர்ந்து செலவே? | |
| புணர்ந்து உடன்போகியவழி, தோழி அறத்தொடு நிற்பக் கேட்ட நற்றாய், 'அதனை முன்னே அறிவித்து, நாம் மணம் புணர்த்த ஒழுகாது போயினள்' என நொந்து சொல்லியது. 9 | | |
|
|
223 | | அம்ம வாழி, தோழி! நம் மலை | | வரை ஆம் இழிய, கோடல் நீட, | | காதலர்ப் பிரிந்தோர் கையற, நலியும் | | தண் பனி வடந்தை அற்சிரம் | 5 | முந்து வந்தனர் நம் காதலோரே. | |
| வரைவிடை வைத்துப்பிரிந்த தலைமகன் குறித்த பருவத்திற்கு முன்னே வருகின்றமை அறிந்த தோழி தலைமகட்கு மகிழ்ந்து சொல்லியது. 3 | | |
|
|
225 | | அம்ம வாழி, தோழி! பைஞ் சுனைப் | | பாசடை நிவந்த பனி மலர்க் குவளை | | உள்ளகம் கமழும் கூந்தல் மெல்லியல் | | ஏர் திகழ் ஒள் நுதல் பசத்தல் | 5 | ஓரார்கொல் நம் காதலோரே? | | மெலிவு கூறி வரைவு கடாவக் கேட்ட தலைமகன் தான் வரைதற்பொருட்டால் ஒருவழித் தணந்து நீட்டித்தானாக, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி கூறியது. 5 | | |
|
|
226 | | அம்ம வாழி,தோழி!நம் மலை | | நறுந்தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள் | | கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி, நின் | | வன்புடை விறல் கவின் கொண்ட | 5 | அன்பிலாளன் வந்தனன், இனியே. | | வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் நீட்டித்து வந்துழித் தோழி தலைமகட்குச் சொல்லியது. 6 | | |
|
|
228 | | அம்ம வாழி, தோழி! நம் ஊர் | | நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன் | | இரந்து குறையுறாஅன் பெயரின், | | என் ஆவதுகொல் நம் இன் உயிர் நிலையே? | | தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி அறத்தொடு நின்றது. 8 | | |
|
|
230 | | அம்ம வாழி, தோழி! நம்மொடு | | சிறு தினைக் காவலன் ஆகி, பெரிதும் நின் | | மென் தோள் ஞெகிழவும், திரு நுதல் பசப்பவும், | | பொன் போல் விறல் கவின் தொலைத்த | 5 | குன்ற நாடற்கு அயர்வர் நன் மணனே. | | தலைமகன் வரைவு வேண்டித் தமரை விடுத்துழி, மறுப்பர்கொல்லோ? என்று அச்சம் உறுகின்ற தலைவிக்குத் தோழி சொல்லியது. 10 | | |
|
|