தொடக்கம்   முகப்பு
371 - 380 மகட்போக்கியவழித்தாயிரங்குபத்து
371
மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர் நெடுங் குன்றம் படு மழை தலைஇச்
சுரம் நனி இனிய ஆகுக தில்ல
'அறநெறி இது' எனத் தெளிந்த என்
பிறை நுதல் குறுமகள் போகிய சுரனே! 1
 
372
என்னும் உள்ளினள்கொல்லோ தன்னை
நெஞ்சு உணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு,
அழுங்கல் மூதூர் அலர் எழ,
செழும் பல் குன்றம் இறந்த என் மகளே? 2
 
373
நினைத்தொறும் கலிழும் இடும்பை எய்துக
புலிக் கோள் பிழைத்த கவைக் கோட்டு முது கலை
மான்பிணை அணைதர, ஆண் குரல் விளிக்கும்
வெஞ் சுரம் என் மகள் உய்த்த
5
அம்பு அமை வல் வில் விடலை தாயே!
தலைமகளைத் தலைமகன் கொண்டு கழிந்த கொடுமை நினைந்து, நற்றாய் சொல்லியது. 3
 
374
பல் ஊழ் நினைப்பினும், நல்லென்று ஊழ
மீளி முன்பின் காளை காப்ப,
முடி அகம் புகாஅக் கூந்தலள்
கடுவனும் அறியாக் காடு இறந்தோளே.
தலைமகள் உடன்போயவழி, அவள் இளமை நினைந்து இரங்கித் தாய் கூறியது. 4
 
375
'இது என் பாவைக்கு இனிய நன் பாவை;
இது என் பைங்கிளி எடுத்த பைங்கிளி;
இது என் பூவைக்கு இனிய சொல் பூவை' என்று,
அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல்
5
காண்தொறும் காண்தொறும் கலங்க,
நீங்கினளோ என் பூங் கணோளே?
சேரியும் அயலும் தேடிக் காணாது வந்தாரைக் கண்டு தலைமகள் தாய் சொல்லியது. 5
 
376
நாள்தொறும் கலிழும் என்னினும் இடை நின்று
காடு படு தீயின் கனலியர் மாதோ
நல் வினை நெடு நகர் கல்லெனக் கலங்க,
பூப் புரை உண்கண் மடவரல்
5
போக்கிய புணர்த்த அறன் இல் பாலே!
தலைமகள் போயவழி, நற்றாய் விதியை வெகுண்டு சொல்லியது. 6
 
377
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்
சென்றனள் மன்ற, என் மகளே
பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே.
தலைமகள் உடன்போயவழி, அவள் பந்து முதலாகிய கண்ட நற்றாய் கலங்கிச் சொல்லியது. 7
 
378
செல்லிய முயலிப் பாஅய சிறகர்
வாவல் உகக்கும் மாலை, யாம் புலம்பப்
போகிய அவட்கோ நோவேன்; தே மொழித்
துணை இலள் கலிழும் நெஞ்சின்
5
இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுவே.
தலைமகள் உடன்போயவழி, அவள் தோழி ஆற்றாமை கண்ட நற்றாய் சொல்லியது. 8
 
379
தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின்
இனிது ஆம்கொல்லோ தனக்கே பனி வரை
இனக் களிறு வழங்கும் சோலை
வயக்குறு வெள் வேலவற் புணர்ந்து செலவே?
புணர்ந்து உடன்போகியவழி, தோழி அறத்தொடு நிற்பக் கேட்ட நற்றாய், 'அதனை முன்னே அறிவித்து, நாம் மணம் புணர்த்த ஒழுகாது போயினள்' என நொந்து சொல்லியது. 9
 
223
அம்ம வாழி, தோழி! நம் மலை
வரை ஆம் இழிய, கோடல் நீட,
காதலர்ப் பிரிந்தோர் கையற, நலியும்
தண் பனி வடந்தை அற்சிரம்
5
முந்து வந்தனர் நம் காதலோரே.
வரைவிடை வைத்துப்பிரிந்த தலைமகன் குறித்த பருவத்திற்கு முன்னே வருகின்றமை அறிந்த தோழி தலைமகட்கு மகிழ்ந்து சொல்லியது. 3
 
225
அம்ம வாழி, தோழி! பைஞ் சுனைப்
பாசடை நிவந்த பனி மலர்க் குவளை
உள்ளகம் கமழும் கூந்தல் மெல்லியல்
ஏர் திகழ் ஒள் நுதல் பசத்தல்
5
ஓரார்கொல் நம் காதலோரே?
மெலிவு கூறி வரைவு கடாவக் கேட்ட தலைமகன் தான் வரைதற்பொருட்டால் ஒருவழித் தணந்து நீட்டித்தானாக, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி கூறியது. 5
 
226
அம்ம வாழி,தோழி!நம் மலை
நறுந்தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள்
கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி, நின்
வன்புடை விறல் கவின் கொண்ட
5
அன்பிலாளன் வந்தனன், இனியே.
வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் நீட்டித்து வந்துழித் தோழி தலைமகட்குச் சொல்லியது. 6
228
அம்ம வாழி, தோழி! நம் ஊர்
நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன்
இரந்து குறையுறாஅன் பெயரின்,
என் ஆவதுகொல் நம் இன் உயிர் நிலையே?
தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி அறத்தொடு நின்றது. 8
230
அம்ம வாழி, தோழி! நம்மொடு
சிறு தினைக் காவலன் ஆகி, பெரிதும் நின்
மென் தோள் ஞெகிழவும், திரு நுதல் பசப்பவும்,
பொன் போல் விறல் கவின் தொலைத்த
5
குன்ற நாடற்கு அயர்வர் நன் மணனே.
தலைமகன் வரைவு வேண்டித் தமரை விடுத்துழி, மறுப்பர்கொல்லோ? என்று அச்சம் உறுகின்ற தலைவிக்குத் தோழி சொல்லியது. 10