தொடக்கம்   முகப்பு
381 - 390 உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்தபத்து
381
பைங் காய் நெல்லி பல உடன் மிசைந்து,
செங் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர்
யார்கொல், அளியர் தாமே வார் சிறைக்
குறுங் கால் மகன்றில் அன்ன
5
உடன் புணர் கொள்கைக் காதலோரே?
உடன்போக்கின்கண் இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது. 1
 
385
'கடுங்கண் காளையொடு நெடுந் தேர் ஏறி,
கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய,
வேறு பல் அருஞ் சுரம் இறந்தனள் அவள்' எனக்
கூறுமின் வாழியோ! ஆறு செல் மாக்கள்!
5
நல் தோள் நயந்து பாராட்டி,
எற் கெடுத்து இருந்த அறன் இல் யாய்க்கே.
வரைவு மறுத்துழி, உடன்போய தலைமகள் இடைச் சுரத்துக் கண்டாரை, 'யான் போகின்ற படியை யாய்க்கு நீர் கூற வேண்டும்' எனச் சொல்லியது. 5
 
388
நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக்
கருங் கால் யாத்து வரி நிழல் இரீஇ,
சிறு வரை இறப்பின், காண்குவை செறிதொடிப்
பொன் ஏர் மேனி மடந்தையொடு
5
வென் வேல் விடலை முன்னிய சுரனே.
தேடிச் சென்ற செவிலிக்கு இடைச் சுரத்துக் கண்டார் அவளைக் கண்ட திறம் கூறியது. 8
 
391
மறு இல் தூவிச் சிறு கருங் காக்கை!
அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப்
பச்சூன் பெய்த பைந் நிண வல்சி
பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ;
5
வெஞ்சின விறல் வேல் காளையொடு
அம்சில் ஓதியை வரக் கரைந்தீமே.
உடன்போகிய தலைமகள் மீடற்பொருட்டு, தாய் காகத்திற்குப் பராய்க்கடன்  த்தது. 1
 
மேல்