381 | | பைங் காய் நெல்லி பல உடன் மிசைந்து, | | செங் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர் | | யார்கொல், அளியர் தாமே வார் சிறைக் | | குறுங் கால் மகன்றில் அன்ன | 5 | உடன் புணர் கொள்கைக் காதலோரே? | |
| உடன்போக்கின்கண் இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது. 1 | | |
|
|
382 | | புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள், வெள் வேல் | | திருந்து கழல் காளையொடு அருஞ் சுரம் கழிவோள், | | எல்லிடை அசைந்த கல்லென் சீறூர்ப் | | புனை இழை மகளிர்ப் பயந்த | 5 | மனை கெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே. | |
| தலைமகள் இடைச் சுரத்தினது ஊரின்கண் எல்லிடைத் தங்கியவழி, அவ்வூர்ப் பெண்டிர் பார்த்து இரங்குதல் கண்டார் சொல்லியது. 2 | | |
|
|
383 | | கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற | | நெடுங் கால் மராஅத்துக் குறுஞ் சினை பற்றி, | | வலம் சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற | | மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே | 5 | பைஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும் | | அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே. | |
| உடன்போகிய தலைமகள் தலைமகன் வளைத்த கொம்பிற் பூக்கொண்டு தனக்கும் பாவைக்கும் வகுக்க, கண்டார் கூறியது. 3 | | |
|
|
384 | | சேட் புலம் முன்னிய அசை நடை அந்தணிர்! | | நும் ஒன்று இரந்தனென் மொழிவல்; எம் ஊர், | | 'யாய் நயந்து எடுத்த ஆய்நலம் கவின | | ஆர் இடை இறந்தனள்' என்மின் | 5 | நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே. | |
| உடன்போகிய தலைமகள் ஆண்டு எதிர்வரும் அந்தணர்க்குச் சொல்லியது. 4 | | |
|
|
385 | | 'கடுங்கண் காளையொடு நெடுந் தேர் ஏறி, | | கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய, | | வேறு பல் அருஞ் சுரம் இறந்தனள் அவள்' எனக் | | கூறுமின் வாழியோ! ஆறு செல் மாக்கள்! | 5 | நல் தோள் நயந்து பாராட்டி, | | எற் கெடுத்து இருந்த அறன் இல் யாய்க்கே. | |
| வரைவு மறுத்துழி, உடன்போய தலைமகள் இடைச் சுரத்துக் கண்டாரை, 'யான் போகின்ற படியை யாய்க்கு நீர் கூற வேண்டும்' எனச் சொல்லியது. 5 | | |
|
|
386 | | புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம் | | நயந்த காதலன் புணர்ந்து சென்றனளே | | நெடுஞ் சுவர் நல் இல் மருண்ட | | இடும்பை உறுவி! நின் கடுஞ் சூல் மகளே. | |
| புணர்ந்து உடன்போகிய தலைமகளை இடைச் சுரத்துக் கண்டார் அவள் தாய்க்குச் சென்று கூறியது. 6 | | |
|
|
387 | | 'அறம் புரி அரு மறை நவின்ற நாவின் | | திறம் புரி கொள்கை அந்தணிர்! தொழுவல்' என்று | | ஒண்டொடி வினவும் பேதைஅம் பெண்டே! | | கண்டனெம் அம்ம, சுரத்திடை அவளை | 5 | இன் துணை இனிது பாராட்ட, | | குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே. | |
| பின்சென்ற செவிலியால் வினாவப்பட்ட அந்தணர் அவட்குச் சொல்லியது. 7 | | |
|
|
388 | | நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக் | | கருங் கால் யாத்து வரி நிழல் இரீஇ, | | சிறு வரை இறப்பின், காண்குவை செறிதொடிப் | | பொன் ஏர் மேனி மடந்தையொடு | 5 | வென் வேல் விடலை முன்னிய சுரனே. | |
| தேடிச் சென்ற செவிலிக்கு இடைச் சுரத்துக் கண்டார் அவளைக் கண்ட திறம் கூறியது. 8 | | |
|
|
389 | | 'செய் வினைப் பொலிந்த செறி கழல் நோன் தாள் | | மை அணல் காளையொடு பைய இயலி, | | பாவை அன்ன என் ஆய்தொடி மடந்தை | | சென்றனள்! என்றிர், ஐய! | 5 | ஒன்றினவோ, அவள் அம் சிலம்பு அடியே! | |
| பின்சென்ற செவிலித்தாய், வினவப் பட்டோர் 'கண்டோம்' என்புழி, சொல்லியது. 9 | | |
|
|
390 | | நல்லோர் ஆங்கண் பரந்து கைதொழுது | | பல் ஊழ் மறுகி வினவுவோயே! | | திண் தோள் வல்வில் காளையொடு | | கண்டனெம் மன்ற சுரத்திடை, யாமே. | |
| பின்சென்ற செவிலித்தாய் பலரையும் வினாவ, கண்டோர் தாம் கண்டவாறு அவட்குக் கூறியது. 10 | | |
|
|