381 | | பைங் காய் நெல்லி பல உடன் மிசைந்து, | | செங் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர் | | யார்கொல், அளியர் தாமே வார் சிறைக் | | குறுங் கால் மகன்றில் அன்ன | 5 | உடன் புணர் கொள்கைக் காதலோரே? | |
| உடன்போக்கின்கண் இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது. 1 | | |
|
|
385 | | 'கடுங்கண் காளையொடு நெடுந் தேர் ஏறி, | | கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய, | | வேறு பல் அருஞ் சுரம் இறந்தனள் அவள்' எனக் | | கூறுமின் வாழியோ! ஆறு செல் மாக்கள்! | 5 | நல் தோள் நயந்து பாராட்டி, | | எற் கெடுத்து இருந்த அறன் இல் யாய்க்கே. | |
| வரைவு மறுத்துழி, உடன்போய தலைமகள் இடைச் சுரத்துக் கண்டாரை, 'யான் போகின்ற படியை யாய்க்கு நீர் கூற வேண்டும்' எனச் சொல்லியது. 5 | | |
|
|
388 | | நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக் | | கருங் கால் யாத்து வரி நிழல் இரீஇ, | | சிறு வரை இறப்பின், காண்குவை செறிதொடிப் | | பொன் ஏர் மேனி மடந்தையொடு | 5 | வென் வேல் விடலை முன்னிய சுரனே. | |
| தேடிச் சென்ற செவிலிக்கு இடைச் சுரத்துக் கண்டார் அவளைக் கண்ட திறம் கூறியது. 8 | | |
|
|
391 | | மறு இல் தூவிச் சிறு கருங் காக்கை! | | அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப் | | பச்சூன் பெய்த பைந் நிண வல்சி | | பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ; | 5 | வெஞ்சின விறல் வேல் காளையொடு | | அம்சில் ஓதியை வரக் கரைந்தீமே. | |
| உடன்போகிய தலைமகள் மீடற்பொருட்டு, தாய் காகத்திற்குப் பராய்க்கடன் த்தது. 1 | | |
|
|