| 401 | | | மறி இடைப்படுத்த மான் பிணை போல, | | | புதல்வன் நடுவணன் ஆக, நன்றும் | | | இனிது மன்ற அவர் கிடக்கை; முனிவு இன்றி | | | நீல் நிற வியலகம் கவைஇய | | 5 | ஈனும், உம்பரும், பெறலருங்குரைத்தே. | | | கடிமனைச் சென்றுவந்த செவிலி உவந்த உள்ளத்தளாய் நற்றாய்க்குச் சொல்லியது. | | |
|
|
|
| 402 | | | புதல்வற் கவைஇய தாய் புறம் முயங்கி | | | நசையினன் வதிந்த கிடக்கை, பாணர் | | | நரம்பு உளர் முரற்கை போல, | | | இனிதால்; அம்ம! பண்புமார் உடைத்தே. 2 | | |
|
|
|
| 403 | | | புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும் | | | அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே | | | அகன் பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன் | | | முறுவலின் இன் நகை பயிற்றி, | | | சிறு தேர் உருட்டும் தளர்நடை கண்டே. 3 | | |
|
|
|
| 404 | | | வாள் நுதல் அரிவை மகன் முலை ஊட்ட, | | | தான் அவள் சிறுபுறம் கவையினன் நன்றும் | | | நறும் பூந் தண் புறவு அணிந்த, | | | குறும் பல் பொறைய நாடுகிழவோனே. 4 | | |
|
|
|
| 405 | | | ஒண் சுடர்ப் பாண்டில் செஞ் சுடர் போல, | | | மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற கனைப் பெயல் | | | பூப் பல அணிந்த வைப்பின் | | | புறவு அணி நாடன் புதல்வன் தாயே. 5 | | |
|
|
|
| 406 | | | மாதர் உண்கண் மகன் விளையாட, | | | காதலித் தழீஇ இனிது இருந்தனனே | | | தாது ஆர் பிரசம் ஊதும் | | | போது ஆர் புறவின் நாடு கிழவோனே. 6 | | |
|
|
|
| 407 | | | நயந்த காதலித் தழீஇ, பாணர் | | | நயம் படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து, | | | இன்புறு புணர்ச்சி நுகரும் | | | மென் புல வைப்பின் நாடு கிழவோனே. 7 | | |
|
|
|
| 408 | | | பாணர் முல்லை பாட, சுடர் இழை | | | வாள் நுதல் அரிவை முல்லை மலைய, | | | இனிது இருந்தனனே, நெடுந்தகை | | | துனி தீர் கொள்கைத் தன் புதல்வனொடு பொலிந்தே. 8 | | |
|
|
|
| 409 | | | புதல்வற் கவைஇயினன் தந்தை; மென் மொழிப் | | | புதல்வன் தாயோ இருவரும் கவைஇயினள் ; | | | இனிது மன்ற அவர் கிடக்கை; | | | நனி இரும் பரப்பின் இவ் உலகுடன் உறுமே. 9 | | |
|
|
|
| 410 | | | மாலை முன்றில் குறுங்கால் கட்டில் | | | மனையோள் துணைவி ஆக, புதல்வன் | | | மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப் | | | பொழுதிற்கு ஒத்தன்று மன்னே. | | 5 | மென் பிணித்து அம்ம பாணனது யாழே! | | | கடிமனைச் சென்ற செவிலி, தலைமகனும் தலைமகளும் புதல்வனொடு பாடல் கேட்டிருந்தமை கண்டு, தன்னுள்ளே உவந்து சொல்லியது. 10 | | |
|
|
|