தொடக்கம்   முகப்பு
401 - 410 செவிலிகூற்றுப்பத்து
401
மறி இடைப்படுத்த மான் பிணை போல,
புதல்வன் நடுவணன் ஆக, நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை; முனிவு இன்றி
நீல் நிற வியலகம் கவைஇய
5
ஈனும், உம்பரும், பெறலருங்குரைத்தே.
கடிமனைச் சென்றுவந்த செவிலி உவந்த உள்ளத்தளாய் நற்றாய்க்குச் சொல்லியது.
 
402
புதல்வற் கவைஇய தாய் புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை, பாணர்
நரம்பு உளர் முரற்கை போல,
இனிதால்; அம்ம! பண்புமார் உடைத்தே. 2
 
403
புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே
அகன் பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன்
முறுவலின் இன் நகை பயிற்றி,
சிறு தேர் உருட்டும் தளர்நடை கண்டே. 3
 
404
வாள் நுதல் அரிவை மகன் முலை ஊட்ட,
தான் அவள் சிறுபுறம் கவையினன் நன்றும்
நறும் பூந் தண் புறவு அணிந்த,
குறும் பல் பொறைய நாடுகிழவோனே. 4
 
405
ஒண் சுடர்ப் பாண்டில் செஞ் சுடர் போல,
மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற கனைப் பெயல்
பூப் பல அணிந்த வைப்பின்
புறவு அணி நாடன் புதல்வன் தாயே. 5
 
406
மாதர் உண்கண் மகன் விளையாட,
காதலித் தழீஇ இனிது இருந்தனனே
தாது ஆர் பிரசம் ஊதும்
போது ஆர் புறவின் நாடு கிழவோனே. 6
 
407
நயந்த காதலித் தழீஇ, பாணர்
நயம் படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து,
இன்புறு புணர்ச்சி நுகரும்
மென் புல வைப்பின் நாடு கிழவோனே. 7
 
408
பாணர் முல்லை பாட, சுடர் இழை
வாள் நுதல் அரிவை முல்லை மலைய,
இனிது இருந்தனனே, நெடுந்தகை
துனி தீர் கொள்கைத் தன் புதல்வனொடு பொலிந்தே. 8
 
409
புதல்வற் கவைஇயினன் தந்தை; மென் மொழிப்
புதல்வன் தாயோ இருவரும் கவைஇயினள் ;
இனிது மன்ற அவர் கிடக்கை;
நனி இரும் பரப்பின் இவ் உலகுடன் உறுமே. 9
 
410
மாலை முன்றில் குறுங்கால் கட்டில்
மனையோள் துணைவி ஆக, புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப்
பொழுதிற்கு ஒத்தன்று மன்னே.
5
மென் பிணித்து அம்ம பாணனது யாழே!
கடிமனைச் சென்ற செவிலி, தலைமகனும் தலைமகளும் புதல்வனொடு பாடல் கேட்டிருந்தமை கண்டு, தன்னுள்ளே உவந்து சொல்லியது. 10
 
மேல்