41 | | 'தன் பார்ப்புத் தின்னும் அன்பு இல் முதலையொடு | | வெண் பூம் பொய்கைத்து, அவன் ஊர்' என்ப; அதனால் | | தன் சொல் உணர்ந்தோர் மேனி | | பொன் போல் செய்யும் ஊர்கிழவோனே. | |
| கழறித் தெருட்டற் பாலராகிய அகம் புகல் மரபின் வாயில்கள் புகுந்துழி, தலைவனையும் பாணன் முதலாகிய பக்கத்தாரையும் இகழ்ந்து, தலைவி கூறியது. 1 | | |
|
|
42 | | மகிழ் மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ | | யாணர் ஊர! நின் மாண் இழை அரிவை? | | காவிரி மலிர்நிறை அன்ன நின் | | மார்பு நனி விலக்கல் தொடங்கியோளே. | |
| தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை, 'தலைவன் பிற பரத்தையருடன் ஒழுகினான்' என்று புலந்தாளாக, அதனை அறிந்த தலைவி, அவன் தன் இல்லத்துப் புகுந்துழி, தான் அறிந்தமை தோன்றச் சொல்லியது. 2 | | |
|
|
43 | | அம்பணத்து அன்ன யாமை ஏறி, | | செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும் | | யாணர் ஊர! நின்னினும் | | பாணன் பொய்யன்; பல சூளினனே. | |
| பாணன் வாயிலாகப் புகுந்து தெளிப்ப மறுத்த தலைமகள், பாணனோடு தலைவன் புகுந்து தெளித்துழிச் சொல்லியது. 3 | | |
|
|
44 | | தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்புத் | | தாய் முகம் நோக்கி வளர்ந்திசினாஅங்கு, | | அதுவே ஐய, நின் மார்பே; | | அறிந்தனை ஒழுகுமதி; அறனுமார் அதுவே. | |
| பரத்தையர் மனைக்கண்ணே பல் நாள் தங்கி, தன் மனைக்கண்ணே வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 4 | | |
|
|
45 | | கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து, | | வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும் | | யாறு அணிந்தன்று, நின் ஊரே; | | பசப்பு அணிந்தனவால் மகிழ்ந! என் கண்ணே. | |
| நெடுநாள் பரத்தையர் இடத்தனாய் ஒழுகிய தலைமகன் மனைவயின் சென்றுழித் தோழி சொல்லியது. 5 | | |
|
|
46 | | நினக்கே அன்று அஃது, எமக்குமார் இனிதே | | நின் மார்பு நயந்த நல் நுதல் அரிவை | | வேண்டிய குறிப்பினை ஆகி, | | ஈண்டு நீ அருளாது, ஆண்டு உறைதல்லே. | |
| மனைக்கண் வருதல் பரத்தை விலக்க விலங்கி, பின்பு, உலகியல் பற்றி, அவள் குறிப்பினோடும் வந்தமை அறிந்த தோழி தலைமகனைப் புலந்து சொல்லியது. 6 | | |
|
|
47 | | முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த | | அகன் பெரு வட்டி நிறைய, மனையோள் | | அரிகாற் பெரும் பயறு நிறைக்கும் ஊர! | | மாண் இழை ஆயம் அறியும் நின் | 5 | பாணன் போலப் பல பொய்த்தல்லே. | |
| பாணற்கு வாயில் மறுத்த தலைமகள் பின் அப் பாணனோடு தலைமகன் புகுந்து, தன் காதன்மை கூறியவழிச் சொல்லியது. 7 | | |
|
|
48 | | வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் | | வராஅல் சொரிந்த வட்டியுள், மனையோள் | | யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர! | | வேண்டேம், பெரும! நின் பரத்தை | 5 | ஆண்டுச் செய் குறியொடு ஈண்டு நீ வரலே. | | பரத்தையர்மாட்டு ஒழுகாநின்று தன் மனைக்கண் | |
| சென்ற தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. 8 | | |
|
|
49 | | அம் சில் ஓதி அசைநடைப் பாண்மகள் | | சில் மீன் சொரிந்து, பல் நெற்பெறூஉம் | | யாணர் ஊர! நின் பாண்மகன் | | யார் நலம் சிதையப் பொய்க்குமோ, இனியே? | |
| பாணன் வாயிலாகப் பரத்தையோடு கூடினான் என்பது கேட்ட தலைமகள் தனக்கும் பாணனால் காதன்மை கூறுவிப்பான் புக்க தலைமகற்குச் சொல்லியது. 9 | | |
|
|
50 | | துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும் | | வஞ்சி ஓங்கிய யாணர் ஊர! | | தஞ்சம் அருளாய் நீயே; நின் | | நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே. | |
| மனையின் நீங்கிப் பரத்தையிடத்துப் பல் நாள் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. 10 | | |
|
|