421 | | மாலை வெண் காழ் காவலர் வீச, | | நறும் பூம் புறவின் ஒடுங்கு முயல் இரியும் | | புன்புல நாடன் மட மகள் | | நலம் கிளர் பணைத் தோள் விலங்கின, செலவே. | |
| வினை பலவற்றிற்கும் பிரிந்து ஒழுகும் தலைமகன் பின்பு மனைவயின் நீங்காது ஒழுகுகின்ற காதல் உணர்ந்தோர் சொல்லியது. 1 | | |
|
|
422 | | கடும் பரி நெடுந் தேர்க் கால் வல் புரவி, | | நெடுங் கொடி முல்லையொடு தளவமலர் உதிர, | | விரையுபு கடைஇ நாம் செல்லின், | | நிரை வளை முன்கை வருந்தலோ இலளே. | |
| மீள்கின்றான் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. 2 | | |
|
|
423 | | மா மழை இடியூஉத் தளி சொரிந்தன்றே; | | வாள் நுதல் பசப்பச் செலவு அயர்ந்தனையே; | | யாமே நிற் துறந்து அமையலம்; | | ஆய் மலர் உண்கணும் நீர் நிறைந்தனவே. | |
| கார்ப் பருவத்தே பிரியக் கருதிய தலைமகற்குத் தோழி தலைமகளது ஆற்றாமை கூறிச் செலவு அழுங்குவித்தது. 3 | | |
|
|
424 | | புறவு அணி நாடன் காதல் மட மகள் | | ஒள் நுதல் பசப்ப நீ செலின், தெண் நீர்ப் | | போது அவிழ் தாமரை அன்ன நின் | | காதல்அம் புதல்வன் அழும், இனி முலைக்கே. | |
|
|
|
425 | | புன் புறப் பேடை சேவல் இன்புற | | மன்னர் இயவரின் இரங்கும் கானம் | | வல்லை நெடுந் தேர் கடவின், | | அல்லல் அரு நோய் ஒழித்தல் எமக்கு எளிதே. | |
| வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. 5 | | |
|
|
426 | | வென் வேல் வேந்தன் அருந் தொழில் துறந்து, இனி, | | நன்னுதல்! யானே செலவு ஒழிந்தனெனே! | | முரசு பாடு அதிர ஏவி, | | அரசு படக் கடக்கும் அருஞ் சமத்தானே. | |
| வேந்தற்குத் தானைத்தலைவனாய் ஒழுகும் தலைமகன் பிரிந்து வினை முடித்து வந்து தலைவியோடு உறைகின்றுழி, 'இன்னும் பிரியுங்கொல்?' என்று கருதிய தலைமகட்குக் கவற்சி தீரச் சொல்லியது. 6 | | |
|
|
427 | | பேர் அமர் மலர்க் கண் மடந்தை! நீயே | | கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே; | | போருடை வேந்தன், 'பாசறை | | வாரான் அவன்' எனச் செலவு அழுங்கினனே. | |
| 'பிரியுங்கொல்?' என்று ஐயுற்று உடன்படாமை மேற்கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவொழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது. 7 | | |
|
|
428 | | தேர் செலவு அழுங்க, திருவில் கோலி, | | ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே; | | வேந்து விடு விழுத் தொழில் ஒழிய, | | யான் தொடங்கினனால், நிற் புறந்தரவே. | |
| 'பிரியுங்கொல்?' என்று ஐயுற்ற தலைமகள் ஐயம் தீரத் தலைமகன் சொல்லியது. 8 | | |
|
|
429 | | பல் இருங் கூந்தல்! பசப்பு நீ விடின், | | செல்வேம் தில்ல யாமே செற்றார் | | வெல் கொடி அரணம் முருக்கிய | | கல்லா யானை வேந்து பகை வெலற்கே. | |
| குறிப்பினால் பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைமகள் உடம்படுவாளாக, வேந்தற்கு உற்றுழிப் பிரியும் தலைமகன் சொல்லியது. 9 | | |
|
|
430 | | நெடும் பொறை மிசைய குறுங் கால் கொன்றை | | அடர் பொன் என்னச் சுடர் இதழ் பகரும் | | கான் கெழு நாடன் மகளே! | | அழுதல் ஆன்றிசின்; அழுங்குவல் செலவே. | |
| 'பிரியுங்கொல்?' என்று ஆற்றாளாகிய தலைமகட்குத் தலைமகன் பருவ வரவு கூறி, 'இது காரணத்தாலும் பிரியேன்' எனச் சொல்லியது. 10 | | |
|
|