461 | | வான் பிசிர்க் கருவியின் பிடவு முகை தகைய, | | கான் பிசிர் கற்ப, கார் தொடங்கின்றே; | | இனையல் வாழி, தோழி; எனையதூஉம் | | நிற் துறந்து அமைகுவர்அல்லர், | 5 | வெற்றி வேந்தன் பாசறையோரே. | |
| பிரிவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி வரவு கூறி, ' த்த பருவம் வந்ததாகலான், அவர் வருவர்; என வற்புறீஇயது. 1 | | |
|
|
462 | | ஏதில பெய்ம் மழை கார் என மயங்கிய | | பேதைஅம் கொன்றைக் கோதை நிலை நோக்கி, | | எவன் இனி, மடந்தை! நின் கலிழ்வே? நின்வயின் | | தகை எழில் வாட்டுநர் அல்லர், | 5 | முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே. | |
| பருவங் கண்டு வேறுபட்ட கிழத்தியைத் தோழி, 'பருவம் அன்று' என வற்புறீஇயது. 2 | | |
|
|
463 | | புதல்மிசை நறு மலர் கவின் பெறத் தொடரி, நின் | | நலம் மிகு கூந்தல் தகை கொளப் புனைய | | வாராது அமையலோ இலரே; நேரார் | | நாடு படு நன்கலம் தரீஇயர், | 5 | நீடினர் தோழி! நம் காதலோரே. | |
| குறித்த பருவம் வரவும் தலைமகன் தாழ்த்துழி, தோழி காரணம் கூறி, வற்புறீஇயது. 3 | | |
|
|
464 | | கண் எனக் கருவிளை மலர, பொன் என | | இவர் கொடிப் பீரம் இரும் புதல் மலரும் | | அற்சிரம் மறக்குநர் அல்லர் நின் | | நல் தோள் மருவரற்கு உலமருவோரே. | |
| வரைந்த அணுமைக்கண்ணே பிரிந்த தலைமகன் குறித்த பருவம் வந்துழி, 'இதனை மறந்தார்' என்ற தலைமகட்குத் தோழி, 'வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாகலான் மறத்தல் கூடாது' எனச் சொல்லி வற்புறீஇயது. 4 | | |
|
|
465 | | நீர் இகுவன்ன நிமிர் பரி நெடுந் தேர், | | கார் செய் கானம் கவின் பட, கடைஇ, | | மயங்கு மலர் அகலம் நீ இனிது முயங்க, | | வருவர், வாழி, தோழி! | 5 | செரு வெங் குருசில் தணிந்தனன் பகையே. | |
| பருவம் கண்டு வேறுபட்ட தலைமகளை, 'வேந்தன் வினைமுடித்தான்' எனக் கேட்ட தோழி, 'வருவர்' என வற்புறீஇயது. 5 | | |
|
|
466 | | வேந்து விடு விழுத் தொழில் எய்தி, ஏந்து கோட்டு | | அண்ணல் யானை அரசு விடுத்து, இனியே | | எண்ணிய நாளகம் வருதல் பெண் இயல் | | காமர் சுடர் நுதல் விளங்கும் | 5 | தே மொழி அரிவை! தெளிந்திசின் யானே. | |
| பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளை, 'அவர் போன காரியம் இடையூறு இன்றி முடிந்து வருதல் பல்லாற்றானும் தெளிந்தேன்' எனத் தோழி சொல்லி ஆற்றுவித்தது. 6 | | |
|
|
467 | | புனை இழை நெகிழச் சாஅய், நொந்துநொந்து | | இனையல் வாழியோ இகுளை! 'வினைவயின் | | சென்றோர் நீடினர் பெரிது' என: தங்காது | | நம்மினும் விரையும் என்ப, | 5 | வெம் முரண் யானை விறல் போர் வேந்தே. | |
| தலைமகன் வினைவயிற் பிரிய ஆற்றாள் ஆகிய தலைமகளைத் தோழி வற்புறீஇயது. 7 | | |
|
|
468 | | வரி நுணல் கறங்க, தேரை தெவிட்ட, | | கார் தொடங்கின்றே காலை; இனி, நின் | | நேர் இறைப் பணைத் தோட்கு ஆர் விருந்து ஆக, | | வடி மணி நெடுந் தேர் கடைஇ, | 5 | வருவர் இன்று, நம் காதலோரே. | |
| பிரிவு நீட ஆற்றாள் ஆய தலைமகட்குத் தோழி பருவங்காட்டி, 'இன்றே வருவர்' என வற்புறீஇயது. 8 | | |
|
|
469 | | பைந் தினை உணங்கல் செம் பூழ் கவரும் | | வன்புல நாடன் தரீஇய, வலன் ஏர்பு | | அம் கண் இரு விசும்பு அதிர, ஏறொடு | | பெயல் தொடங்கின்றே வானம்; | 5 | காண்குவம்; வம்மோ, பூங் கணோயே! | |
| பிரிவு நீட ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி 'அவரை நமக்குத் தருதற்கு வந்தது காண் இப் பருவம்' எனக் காட்டி வற்புறீஇயது. 9 | | |
|
|
470 | | இரு நிலம் குளிர்ப்ப வீசி, அல்கலும் | | அரும் பனி அளைஇய அற்சிரக் காலை | | உள்ளார், காதலர், ஆயின், ஒள்ளிழை! | | சிறப்பொடு விளங்கிய காட்சி | 5 | மறக்க விடுமோ, நின் மாமைக் கவினே? | |
| பருவம் வந்தது கண்டு, 'தாம் குறித்த இதனை மறந்தார்' என வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. 10 | | |
|
|