தொடக்கம்   முகப்பு
471 - 480 பாணன்பத்து
471
எல் வளை நெகிழ, மேனி வாட,
பல் இதழ் உண்கண் பனி அலைக் கலங்க,
துறந்தோன் மன்ற, மறம் கெழு குருசில்;
அது மற்று உணர்ந்தனை போலாய்
5
இன்னும் வருதி; என் அவர் தகவே?
பருவ வரவின்கண் தூதாகி வந்த பாணன் கூறிய வழி, தோழி சொல்லியது. 1
 
192
கோடு புலம் கொட்ப, கடல் எழுந்து முழங்க,
பாடு இமிழ் பனித் துறை ஓடு கலம் உகைக்கும்
துறைவன் பிரிந்தென, நெகிழ்ந்தன,
வீங்கின மாதோ தோழி! என் வளையே!
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள்போலத் தன் மெலிவு நீங்கினமை தோழிக்குத் சொல்லியது. 2
196
கோடு ஈர் எல் வளை, கொழும் பல் கூந்தல்,
ஆய் தொடி, மடவரல் வேண்டுதிஆயின்
தெண் கழிச் சேயிறாப் படூஉம்
தண் கடல் சேர்ப்ப! வரைந்தனை கொண்மோ.
குறை மறுக்கப்பட்ட தலைமகன் பின்னும் குறைவேண்டியவழித் தோழி சொல்லியது. 6
199
கானல்அம் பெருந் துறைக் கலிதிரை திளைக்கும்
வான் உயர் நெடு மணல் ஏறி, ஆனாது,
காண்கம் வம்மோ தோழி!
செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே!
தலைமகன் ஒருவழித் தணந்துழி ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கும் தோழி சொல்லியது. 9
202
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற
நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே.
தலைமகன் வரைதல் வேண்டித் தானே வருகின்றமை கண்ட தோழி உவந்த உள்ளத்தளாய்த் தலைமகட்குக் காட்டிச் சொல்லியது. 2
 
மேல்