316 | | பொன் செய் பாண்டில் பொலங்கலம் நந்த, | | தேர் அகல் அல்குல் அவ் வரி வாட, | | இறந்தோர்மன்ற தாமே பிறங்கு மலைப் | | புல் அரை ஓமை நீடிய | 5 | புலி வழங்கு அதர கானத்தானே. | |
| தலைமகள் மெலிவுக்கு நொந்து, தலைமகன் பிரிவின்கண் தோழி கூறியது. 6 | | |
|
|
492 | | நின்னே போலும் மஞ்ஞை ஆல, நின் | | நல் நுதல் நாறும் முல்லை மலர, | | நின்னே போல மா மருண்டு நோக்க, | | நின்னே உள்ளி வந்தனென் | 5 | நல் நுதல் அரிவை! காரினும் விரைந்தே. | |
|
|
|
495 | | செந் நில மருங்கில் பல் மலர் தாஅய், | | புலம்பு தீர்ந்து, இனியஆயின, புறவே | | பின் இருங் கூந்தல் நல் நலம் புனைய, | | உள்ளுதொறும் கலிழும் நெஞ்சமொடு, | 5 | முள் எயிற்று அரிவை! யாம் வந்தமாறே. | |
|
|
|
496 | | மா புதல் சேர, வரகு இணர் சிறப்ப | | மா மலை புலம்ப, கார் கலித்து அலைப்ப, | | பேர் அமர்க் கண்ணி! நிற் பிரிந்து உறைநர் | | தோள் துணையாக வந்தனர்; | 5 | போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே. | |
| குறித்த பருவத்தின்கண் தலைமகன் வந்துழி, தோழி தலைமகட்குச் சொல்லியது. 6 | | |
|
|
499 | | பிடவம் மலர, தளவம் நனைய, | | கார் கவின் கொண்ட கானம் காணின், | | 'வருந்துவள் பெரிது' என, அருந் தொழிற்கு அகலாது, | | வந்தனரால், நம் காதலர் | 5 | அம் தீம் கிளவி! நின் ஆய் நலம் கொண்டே. | |
|
|
|