491 | | கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலிய, | | நொந்து நொந்து உயவும் உள்ளமொடு | | வந்தனெம் மடந்தை! நின் ஏர் தர விரைந்தே. | |
| வினை முற்றிப் புகுந்த தலைமகன் தலைவிக்குச் சொல்லியது. 1 | | |
|
|
492 | | நின்னே போலும் மஞ்ஞை ஆல, நின் | | நல் நுதல் நாறும் முல்லை மலர, | | நின்னே போல மா மருண்டு நோக்க, | | நின்னே உள்ளி வந்தனென் | 5 | நல் நுதல் அரிவை! காரினும் விரைந்தே. | |
|
|
|
493 | | ஏறு முரண் சிறப்ப, ஏறு எதிர் இரங்க, | | மாதர் மான் பிணை மறியொடு மறுக, | | கார் தொடங்கின்றே காலை | | நேர் இறை முன்கை! நின் உள்ளி யாம் வரவே. | |
|
|
|
494 | | வண்டு தாது ஊத, தேரை தெவிட்ட, | | தண் கமழ் புறவின் முல்லை மலர, | | இன்புறுத்தன்று பொழுதே; | | நின் குறி வாய்த்தனம்; தீர்க, இனிப் படரே! | |
|
|
|
495 | | செந் நில மருங்கில் பல் மலர் தாஅய், | | புலம்பு தீர்ந்து, இனியஆயின, புறவே | | பின் இருங் கூந்தல் நல் நலம் புனைய, | | உள்ளுதொறும் கலிழும் நெஞ்சமொடு, | 5 | முள் எயிற்று அரிவை! யாம் வந்தமாறே. | |
|
|
|
496 | | மா புதல் சேர, வரகு இணர் சிறப்ப | | மா மலை புலம்ப, கார் கலித்து அலைப்ப, | | பேர் அமர்க் கண்ணி! நிற் பிரிந்து உறைநர் | | தோள் துணையாக வந்தனர்; | 5 | போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே. | |
| குறித்த பருவத்தின்கண் தலைமகன் வந்துழி, தோழி தலைமகட்குச் சொல்லியது. 6 | | |
|
|
497 | | குறும் பல் கோதை கொன்றை மலர, | | நெடுஞ் செம் புற்றம் ஈயல் பகர, | | மா பசி மறுப்ப, கார் தொடங்கின்றே | | பேர் இயல் அரிவை! நின் உள்ளிப் | 5 | போர் வெங் குருசில் வந்தமாறே. | |
|
|
|
498 | | தோள் கவின் எய்தின; தொடி நிலை நின்றன; | | நீள் வரி நெடுங் கண் வாள் வனப்பு உற்றன | | ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டென, | | விரை செலல் நெடுந் தேர் கடைஇ, | 5 | வரையக நாடன் வந்தமாறே. | |
|
|
|
499 | | பிடவம் மலர, தளவம் நனைய, | | கார் கவின் கொண்ட கானம் காணின், | | 'வருந்துவள் பெரிது' என, அருந் தொழிற்கு அகலாது, | | வந்தனரால், நம் காதலர் | 5 | அம் தீம் கிளவி! நின் ஆய் நலம் கொண்டே. | |
|
|
|
500 | | கொன்றைப் பூவின் பசந்த உண்கண், | | குன்றக நெடுஞ் சுனைக் குவளை போல, | | தொல் கவின் பெற்றன இவட்கே வெல் போர் | | வியல் நெடும் பாசறை நீடிய | 5 | வய மான் தோன்றல் நீ! வந்தமாறே. | |
|
|
|