தொடக்கம்   முகப்பு
51 - 60 தோழிகூற்றுப்பத்து
51
நீர் உறை கோழி நீலச் சேவல்
கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர!
புளிங்காய் வேட்கைத்து அன்று, நின்
மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே.
வாயில் பெற்றுப் புகுந்து போய்ப் புறத்தொழுக்கம் ஒழுகி, பின்பும் வாயில் வேண்டும் தலைமகற்குத் தோழி மறுத்தது. 1
54
திண் தேர்த் தென்னவன் நல் நாட்டு உள்ளதை
வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும்
தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ,
ஊரின் ஊரனை நீ தர, வந்த
5
பைஞ்சாய்க் கோதை மகளிர்க்கு
அஞ்சுவல், அம்ம! அம் முறை வரினே.
வாயில் வேண்டிவந்த தலைமகற்குத் தலைமகள் குறிப்பு அறிந்த தோழி, அவன் கொடுமை கூறி, வாயில் மறுத்தது. 4
56
பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா,
வெல் போர்ச் சோழர், ஆமூர் அன்ன இவள்
நலம்பெறு சுடர் நுதல் தேம்ப,
எவன் பயம் செய்யும், நீ தேற்றிய மொழியே?
புறத்தொழுக்கம் உளதாகியது அறிந்து தலைமகள் மெலிந்துழி, 'அஃது இல்லை' என்று தேற்றும் தலைமகற்குத் தோழி சொல்லியது. 6
244
அம்ம வாழி, தோழி! பல் மலர்
நறுந் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை
குன்றம் பாடான் ஆயின்,
என் பயம் செய்யுமோ வேலற்கு வெறியே?
வெறியாடல் துணிந்துழி, விலக்கலுறுந் தோழி செவிலி கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது. 4
 
249
பெய்ம்மணல் வரைப்பில் கழங்கு படுத்து, அன்னைக்கு,
'முருகு' என மொழியும் வேலன்; மற்று அவன்
வாழிய இலங்கும் அருவிச்
சூர் மலை நாடனை அறியாதோனே!
வேலன் கூறிய மாற்றத்தை மெய்யெனக் கொண்ட தாய் கேட்பத் தலைமகட்குத் தோழி கூறியது. 9
 
மேல்