71 | | சூது ஆர் குறுந் தொடிச் சூர் அமை நுடக்கத்து | | நின் வெங் காதலி தழீஇ, நெருநை | | ஆடினை என்ப, புனலே; அலரே | | மறைத்தல் ஒல்லுமோ, மகிழ்ந? | 5 | புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே? | |
| பரத்தையரோடு புனலாடினான் எனக் கேட்டுப் புலந்த தலைமகள் தலைமகன் அதனை இல்லை என்று மறைத்துழிச் சொல்லியது. 1 | | |
|
|
72 | | வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழைத் | | திதலை அல்குல், துயல்வரும் கூந்தல், | | குவளை உண்கண், ஏஎர் மெல்லியல் | | மலர் ஆர் மலிர்நிறை வந்தென, | 5 | புனல் ஆடு புணர்துணை ஆயினள், எமக்கே. | |
| தலைமகள் புலவி நீக்கித் தன்னோடு புதுப் புனல் ஆட வேண்டிய தலைமகன் களவுக் காலத்துப் புனலாட்டு நிகழ்ந்ததனை அவள் கேட்பத் தோழிக்குச் சொல்லியது. 2 | | |
|
|
73 | | வண்ண ஒண் தழை நுடங்க, வால் இழை | | ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தென, | | கள் நறுங் குவளை நாறித் | | தண்ணென்றிசினே பெருந் துறைப் புனலே. | |
|
|
|
74 | | விசும்பு இழி தோகைச் சீர் போன்றிசினே | | பசும் பொன் அவிர் இழை பைய நிழற்ற, | | கரை சேர் மருதம் ஏறிப் | | பண்ணை பாய்வோள் தண் நறுங் கதுப்பே. | |
|
|
|
75 | | பலர் இவண் ஒவ்வாய், மகிழ்ந! அதனால், | | அலர் தொடங்கின்றால் ஊரே மலர | | தொல் நிலை மருதத்துப் பெருந் துறை, | | நின்னோடு ஆடினள், தண் புனல் அதுவே. | |
| பரத்தையோடு புனலாடி வந்த தலைமகன் அதனை மறைத்துக் கூறியவழித் தோழி கூறியது. 5 | | |
|
|
76 | | பைஞ்சாய்க் கூந்தல், பசு மலர்ச் சுணங்கின் | | தண் புனலாடி, தன் நலம் மேம்பட்டனள் | | ஒண் தொடி மடவரல், நின்னோடு, | | அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே. | |
|
|
|
77 | | அம்ம வாழியோ, மகிழ்ந! நின் மொழிவல்: | | பேர் ஊர் அலர் எழ, நீர் அலைக் கலங்கி, | | நின்னொடு தண் புனல் ஆடுதும்; | | எம்மொடு சென்மோ; செல்லல், நின் மனையே. | |
| முன் ஒரு ஞான்று தலைவியோடு புனலாடினான் எனக்கேட்டு, ' இவனுடன் இனி ஆடேன்' என உட்கொண்ட பரத்தை, ' புதுப்புனல் ஆடப் போது' என்ற தலைமகற்குச் சொல்லியது. 7 | | |
|
|
78 | | கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளி | | மதில் கொல் யானையின், கதழ்பு, நெறி வந்த, | | சிறை அழி புதுப்புனல் ஆடுகம்; | | எம்மொடு கொண்மோ, எம் தோள் புரை புணையே. | |
|
|
|
79 | | 'புதுப் புனல் ஆடி அமர்த்த கண்ணள், | | யார் மகள், இவள்?' எனப் பற்றிய மகிழ்ந! | | யார் மகளாயினும் அறியாய்; | | நீ யார் மகனை, எம் பற்றியோயே? | |
| தன்னோடு கூடாது தனித்துப் புனலாடுகின்றான் எனக் கேட்டு, தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை தானும் தனியே போய்ப் புனலாடினாளாக, அவளை ஊடல் தீர்த்தற் பொருட்டாகத் தலைமகன் சென்று, தான் அறியான் போல நகையாடிக் கூறிக் கைப்பற்றி | | |
|
|
80 | | புலக்குவெம் அல்லேம்; பொய்யாது மோ: | | நலத்தகு மகளிர்க்குத் தோள் துணை ஆகி, | | தலைப் பெயல் செம் புனல் ஆடித் | | தவ நனி சிவந்தன, மகிழ்ந! நின் கண்ணே. | |
| தன்னை ஒழியப் புதுப்புனலாடித் தாழ்த்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது. 10 | | |
|
|