91 | | நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து | | வெறி மலர்ப் பொய்கை, ஆம்பல் மயக்கும் | | கழனி ஊரன் மகள் இவள்; | | பழன வெதிரின் கொடிப் பிணையலளே. | |
| குறைவேண்டிப் பின்னின்று வந்த தலைமகற்குத் தோழி, 'இவள் இளையள் விளைவு இலள்' எனச் சேட்படுத்தது. 1 | | |
|
|
93 | | எருமை நல் ஏற்றினம் மேயல் அருந்தென, | | பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா, | | செய்த வினைய மன்ற பல் பொழில் | | தாது உண் வெறுக்கைய ஆகி, இவள் | 5 | போது அவிழ் முச்சி ஊதும் வண்டே. | |
| முயக்கம் பெற்றவழிப் பிறந்த வெறிநாற்றத்தால் பண்டையளவு அன்றி வண்டுகள் மொய்த்தனவாக, 'இதற்குக் காரணம் என்?' என்று வினாவிய செவிலித் தாய்க்குக் கூறுவாள் போன்று, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. 3 | | |
|
|
95 | | கருங் கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ, | | நெடுங் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும் | | புனல் முற்று ஊரன், பகலும், | | படர் மலி அரு நோய் செய்தனன், எமக்கே. | |
| உண்டிக்காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கி, பரத்தையிடத்தனாய்த் தலைமகன் ஒழுகியவழி, அவற்கு வாயிலாய் வந்தார்க்குத் தலைமகள் சொல்லியது. 5 | | |
|
|
97 | | பகன்றை வால் மலர் மிடைந்த கோட்டைக் | | கருந் தாள் எருமைக் கன்று வெரூஉம், | | பொய்கை, ஊரன் மகள், இவள்; | | பொய்கைப் பூவினும் நறுந் தண்ணியளே. | |
| புறத்தொழுக்கம் இன்றியே இருக்கவும், 'உளது' என்று புலந்த தலைமகளைப் புலவி நீக்கிய தலைமகன், புணர்ச்சியது இறுதிக்கண், தன்னுள்ளே சொல்லியது. 7 | | |
|
|
262 | | சிறு தினை மேய்ந்த தறுகண் பன்றி | | துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும் | | இலங்குமலை நாடன் வரூஉம்; | | மருந்தும் அறியும்கொல் தோழி! அவன் விருப்பே? | |
| 'வரைந்து கொள்ள நினைக்கிலன்' என்று வேறுபட்ட தலைமகள், 'அவன் நின்மேல் விருப்பமுடையன்; நீ நோகின்றது என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. 2 | | |
|
|
265 | | புலி கொல் பெண்பால் பூ வரிக் குருளை | | வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் | | குன்று கெழு நாடன் மறந்தனன் | | பொன்போல் புதல்வனோடு என் நீத்தோனே. | |
| பரத்தை இடத்தானாக ஒழுகுகின்ற தலைமகன் விடுத்த வாயில்மாக்கட்குத் தலைமகள் சொல்லியது. 5 | | |
|
|
267 | | சிறு கண் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல் | | துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி, | | ஐவனம் கவரும் குன்ற நாடன் | | வண்டு படு கூந்தலைப் பேணி, | 5 | பண்பு இல சொல்லும், தேறுதல் செத்தே. | |
| 'தலைமகளைத் தலைமகன் வரைவல்' எனத் தெளித்தான் என்று அவள் கூறக் கேட்ட தோழி, அவன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. 7 | | |
|
|
269 | | கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை | | விளைந்த செறுவின் தோன்றும் நாடன் | | வாராது அவண் உறை நீடின் நேர் வளை | | இணை ஈர் ஓதி! நீ அழ | 5 | துணை நனி இழக்குவென், மடமையானே. | |
| குறை நயப்பக் கூறி தலைமகளைக் கூட்டிய தோழி, அவன் இடையிட்டு வந்து சிறைப்புறத்து நின்றுழி, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. 9 | | |
|
|
272 | | கரு விரல் மந்திக் கல்லா வன் பறழ் | | அரு வரைத் தீம் தேன் எடுப்பி, அயலது | | உரு கெழு நெடுஞ் சினைப் பாயும் நாடன் | | இரவின் வருதல் அறியான்; | 5 | 'வரும் வரும்' என்ப தோழி! யாயே. | |
| அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் சிறைப்புறத்தானாக, முன்னை நாள் நிகழ்ந்ததனைத் தோழிக்குச் சொல்லுவாள் போன்று, தலைமகள் சொல்லியது. 2 | | |
|
|