தொடக்கம்   முகப்பு
91 - 100 எருமைப் பத்து
91
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து
வெறி மலர்ப் பொய்கை, ஆம்பல் மயக்கும்
கழனி ஊரன் மகள் இவள்;
பழன வெதிரின் கொடிப் பிணையலளே.
குறைவேண்டிப் பின்னின்று வந்த தலைமகற்குத் தோழி, 'இவள் இளையள் விளைவு இலள்' எனச் சேட்படுத்தது. 1
93
எருமை நல் ஏற்றினம் மேயல் அருந்தென,
பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா,
செய்த வினைய மன்ற பல் பொழில்
தாது உண் வெறுக்கைய ஆகி, இவள்
5
போது அவிழ் முச்சி ஊதும் வண்டே.
முயக்கம் பெற்றவழிப் பிறந்த வெறிநாற்றத்தால் பண்டையளவு அன்றி வண்டுகள் மொய்த்தனவாக, 'இதற்குக் காரணம் என்?' என்று வினாவிய செவிலித் தாய்க்குக் கூறுவாள் போன்று, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. 3
95
கருங் கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ,
நெடுங் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும்
புனல் முற்று ஊரன், பகலும்,
படர் மலி அரு நோய் செய்தனன், எமக்கே.
உண்டிக்காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கி, பரத்தையிடத்தனாய்த் தலைமகன் ஒழுகியவழி, அவற்கு வாயிலாய் வந்தார்க்குத் தலைமகள் சொல்லியது. 5
97
பகன்றை வால் மலர் மிடைந்த கோட்டைக்
கருந் தாள் எருமைக் கன்று வெரூஉம்,
பொய்கை, ஊரன் மகள், இவள்;
பொய்கைப் பூவினும் நறுந் தண்ணியளே.
புறத்தொழுக்கம் இன்றியே இருக்கவும், 'உளது' என்று புலந்த தலைமகளைப் புலவி நீக்கிய தலைமகன், புணர்ச்சியது இறுதிக்கண், தன்னுள்ளே சொல்லியது. 7
262
சிறு தினை மேய்ந்த தறுகண் பன்றி
துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும்
இலங்குமலை நாடன் வரூஉம்;
மருந்தும் அறியும்கொல் தோழி! அவன் விருப்பே?
'வரைந்து கொள்ள நினைக்கிலன்' என்று வேறுபட்ட தலைமகள், 'அவன் நின்மேல் விருப்பமுடையன்; நீ நோகின்றது என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. 2
 
265
புலி கொல் பெண்பால் பூ வரிக் குருளை
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும்
குன்று கெழு நாடன் மறந்தனன்
பொன்போல் புதல்வனோடு என் நீத்தோனே.
பரத்தை இடத்தானாக ஒழுகுகின்ற தலைமகன் விடுத்த வாயில்மாக்கட்குத் தலைமகள் சொல்லியது. 5
 
267
சிறு கண் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்
துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி,
ஐவனம் கவரும் குன்ற நாடன்
வண்டு படு கூந்தலைப் பேணி,
5
பண்பு இல சொல்லும், தேறுதல் செத்தே.
'தலைமகளைத் தலைமகன் வரைவல்' எனத் தெளித்தான் என்று அவள் கூறக் கேட்ட தோழி, அவன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. 7
 
269
கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை
விளைந்த செறுவின் தோன்றும் நாடன்
வாராது அவண் உறை நீடின் நேர் வளை
இணை ஈர் ஓதி! நீ அழ
5
துணை நனி இழக்குவென், மடமையானே.
குறை நயப்பக் கூறி தலைமகளைக் கூட்டிய தோழி, அவன் இடையிட்டு வந்து சிறைப்புறத்து நின்றுழி, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. 9
 
272
கரு விரல் மந்திக் கல்லா வன் பறழ்
அரு வரைத் தீம் தேன் எடுப்பி, அயலது
உரு கெழு நெடுஞ் சினைப் பாயும் நாடன்
இரவின் வருதல் அறியான்;
5
'வரும் வரும்' என்ப தோழி! யாயே.
அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் சிறைப்புறத்தானாக, முன்னை நாள் நிகழ்ந்ததனைத் தோழிக்குச் சொல்லுவாள் போன்று, தலைமகள் சொல்லியது. 2
 
மேல்