| 136. நாணிலை மன்ற பாண நீயே கோணேரிலங்குவளை நெகிழ்த்த கானலந் துறைவற்குச் சொல்லுகுப் போயே. | எ-து வாயிலாய்ப் 1புகுந்து தலைமகன் குணங்கூறிய பாணற்கு வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது. குறிப்பு. கோள் நேர் இலங்கு வளைமுன்பு கொள்ளுதலமைந்த அழகிய வளைகள், நெகிழ்த்த-நெகிழச் செய்த. வளைநெகிழ்த்த துறைவன் : குறுந் 11 : 1, துறைவற்கு-துறைவன் பொருட்டு, சொல் உகுப்போயே-பயன்படு சொற்களைப் பாழ்படுத்துகின் றனையே; கலித். 69 : 19. சொல்லுகுப்போயே, நாணிலை, மன்ற. (பி-ம்.) 1‘புகுந்த? ( 6 ) | |