எ-து பின் முறையாக்கிய பெரும்பொருள் வதுவை முடித்தவளை
இல்லத்துக் கொண்டு புகுந்துழித் தலைமகள் உவந்து சொல்லியது.
(ப-ரை.) மழைப்பருவம் வேண்டியிருக்கின்ற மயில்கள் ஆலத்
தேன்கள் இமிர மழைபெய்யும் நாடவென்றது யாங்கள் கருதியிருக்
கின்ற பெரும் பொருளை உவப்ப முடித்தனை எ-று.
குறிப்பு. பெருந்தேன்-பெரியவண்டுகள். இமிர-ஒலிக்க.
தழீஇய-தழுவிய. கடிஅயர-மணத்தைச்செய்ய பெற்றோள் நின்னி
னும் சிறந்தனள்.
பின்முறையாக்கிய பெரும்பொருள்வதுவை-மூவகை வருணத்
தாரும் முன்னர்த்தத்தம் வருணத்து எய்திய வதுவைமனைவியர்க்
குப்பின்னர் முறையாற்செய்து கொள்ளப்பட்ட பெரிய பொருளாகிய
வதுவை மனைவியர் (தொல். கற்பு. 31, ந.).
(பி-ம்.) 1 ‘யாயினிப் பெற்றோளே? ( 2 )