4 பாலை
(35) இளவேனிற் பத்து
342. அவரோ வாரார் தான்வந் தன்றே சுரும்புகளித் தாலு மிருஞ்சினைக் கருங்கா னுணவங் கமழும் பொழுதே.
குறிப்பு. ஆலும்-ஒலிக்கும். இருஞ்சினை-பெரிய கிளை. நுணவம்-நுணா; இது வேனிற்கு உரிய மலர். ( 2 )