441

5. முல்லை

(45) பாசறைப் பத்து


441. ஐய வாயின செய்யோள் கிளவி
   கார்நா ளுருமொடு கையறப் பிரிந்தன
   நோய்நன்கு செய்தன வெமக்கே
   யாமுறு துயரமவ ளறியினோ நன்றே.

    எ-து சென்றவினை முடியாமையிற் கார்காலம் வந்துவிடத்து
மீளப்பெறாத தலைமகன் தலைமகளுழைநின்றும் வந்த தூதர்
வார்த்தை கேட்டு இரங்கியது.

  (ப-ரை.) கார்நாள் உருமொடு நோய் நன்குசெய்தன,
செய்யோள் கிளவியெனக் கூட்டுக.

  குறிப்பு. ஐயவாயின-அழகையுடையனவாயின. செய்யோள்
தலைவியினுடைய. கிளவி-வார்த்தைகள். கார்நாள் உருமொடு-
மழைக்காலத்து இடியொடு. கையற-செயலற. பிரிந்தென-பிரிய.
பிரிந்தென உருமொடு செய்யோள் கிளவியும் நோய்செய்தன.
யாமுற்ற துயரத்தை.

   (மேற்.) மு. தலைவன் கூற்று நிகழுமிடங்களுள் இது வினை
முடியாமையாற் பருவங்கண்டு மீளப்பெறாத தலைவன் தூதர்
வார்த்தை கேட்டு வருந்திக்கூறியது. (தொல். அகத். 41. ந.) ( 1 )