443

5. முல்லை

(45) பாசறைப் பத்து


443. நனிசேய்த் தென்னாது நற்றே ரேறிச்சென்
    றிலங்கு நிலவி னிளம்பிறை போலக்
    காண்குவெந் தில்லவவள் கவின்பெறு சுடர்நுதல்
    விண்ணுய ரரண்பல வௌவிய
    மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே.

இதுவுமது.

    குறிப்பு. நனி சேய்த்து என்னாது-மிக்க தூரத்திலுள்ளது என்று
எண்ணாமல். காண்குவெம்-காண்பேம். தில்ல : விழைவின்கண்
வந்தது. நுதலுக்கு இளம்பிறை உவமை. நுதலைப் பிறைபோலக்
காண்குவம். வௌவிய-கைப்பற்றிய. மண்ணுதல்-கழுவுதல்.
அரண்பல வௌவிய முரசு; வௌவிய வேந்து எனினுமாம்.
வேந்தினது தொழில் விடின் காண்குவெம்.

   (மேற்.) மு. இது வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன் குறித்த
பருவத்து வினைமுடியாமையிற் புலம்பியது. (தொல். அகத். 41, ,). ( 3 )