454

5. முல்லை

(46) பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து


454.தளவின் பைங்கொடி தழீஇப் பையென
   நிலவி னன்ன நேரரும்பு பேணிக்
   கார் நயந் தெய்து முல்லையவர்
   தேர் நயந் தறையுமென் மாமைக் கவினே.

   எ-து பருவவரவின்கண் தலைமகள் ஆற்றளாய்த் தோழிக்குச்
சொல்லியது.

   குறிப்பு. தளவு -செம்முல்லை. பையென - மெல்ல. தளவும்
முல்லையும்: பொருந. 199-200: குறுந். 382 : 1-3. நயந்து -வருதலை
விரும்பி. தேரை நயந்து என் கவின் உறையும்.