459

5. முல்லை

(46) பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து


459. மெல்லிறைப் பணைத்தோட் 1 பசலை தீரப்
    புல்லவு 2 மியைவது கொல்லோ புல்லர்
    ஆரரண் கடந்த சீர்கெழு தானை
    வெல்போர் வேந்தனெடு சென்ற
    நல்வய லுார னறுந்தண் மார்பே.

    எ-து ‘வேந்தன் வினைமுற்றினன்; நின்காதலர் கடுகவருவர்?
எனக் 3 கேட்டதலைமகள் தோழிக்குச் சொல்லியது.

    குறிப்பு.. இறை -சந்து. இயைவது - பொருந்துவது. புல்லார் -
பகைவர். ஊரனது மார்பு புல்லவும் இயைவது கொல்லோ.

   (பி-ம்) 1 ‘பயலைநீங்க? 2 ‘மிசைவது? 3 ‘கேட்ட தோழிக்குத்
தலைமகள் சொல்லியது.? ( 9 )