64. அலமர லாயமோ டமர்துணை தழீஇ நலமிகு புதுப்புன லாடக் கண்டோர் ஒருவரு மிருவரு மல்லர் பலரே தெய்யவெம் மறையா தீமே.
எ-து தலைமகன் பரத்தையரோடு புனலாடினா னென்பதறிந்த தலைமகள் அவன் மறைத்துழிச் சொல்லியது.
குறிப்பு. அலமரல் ஆயம்-சுழலுகின்ற ஆயத்தார். அமர்துணை - அமர்ந்த பரத்தையரை. பலரே - பல பரத்தையரே, தெய்ய : அசைச்சொல். எம்மறையாதீமே - எம்மை ஒளியாதே. ( 4 )