83

(9) புலவி விராய பத்து

 


83. மணந்தனை யருளா யாயினும் 1பையத்
தணந்தனை யாகி யுய்ம்மோ நும்மூர்
ஒண்டொடி முன்கை யாயமும்
தண்டுறை யூரன் பெண்டெனப் படற்கே.

 எ-து 2வரைந்த அணுமைக்கண்ணே தலைமகற்குப் புறத்
தொழுக்கமுண்டாகிய வழி அதனையறிந்த தலைவி அவனோடு புலந்து
சொல்லியது.

  குறிப்பு. அருளாயாயினும்-அருள் செய்யாவிடினும். பைபய=பையப்.
பைய-மெல்லமெல்ல; நற். 199 : 10; குறுந். 215 : 1 தணந்தனையாகி -
பிரிகின்றவனாகி. உய்ம்மோ - செல்வாயாக. ஆயம் என்றது பரத்தையரை.
ஊரன் பெண்டு எனப்படற்கு - ஊரனாகிய உன்னுடைய மனைவி என்று
சொல்லும்படி . படற்கு, பைபய உய்ம்மோ.

  (பி-ம்.) 1 ‘பையத்’ 2 ‘வரைந்தணுமைக்கண்ணே’     ( 3 )