163


(17) சிறுவெண்காக்கைப் பத்து


163. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
    இருங்கழித் துவலை யொலியிற் றுஞ்சும்
    துறைவன் றுறந்தெனத் துறந்தென்
    இறையேர் முன்கை நீங்கிய வளையே.
இதுவுமது.

  (ப-ரை.) ‘சிறுவெண்காக்கை, இருங்கழித் துவலை யொலியில்
துஞ்சும்? என்றது ஆண்டுத் தனக்கு இனியவாகக் கூறுவார்
மாற்றங் கேட்டு முயற்சியின்றித் தங்குவானென்பதாம்.

  குறிப்பு. துவலையினது ஒலியில். துஞ்சும்-உறங்கும். துறந்
தென-என்னைத் துறக்க. துறந்து-நீங்கி. இறையேர் முன்கை-
சந்தையுடைய முன்கையினின்றும்? நீங்கிய-நீங்கின. வளை நீங்கிய.   ( 3 )