96

(10) எருமைப்பத்து

 


96. 1அணிநடை யெருமை யாடிய வள்லல்
  மணிநிற நெய்த லாம்பலொடு கலிக்கும்
  கழனி யூரன் மகளிவள்
  பழன வூரன் பாயலின் றுணையே.

 எ-து பரத்தையர் பலரோடும் ஒழுகுதல் கண்டு பொறாதிருந்த
தலைமகள் தலைமகன் மனைக்கண் புகுந்துழி உடன்படுதல்கண்ட
வாயில்கள் தம்முள்ளே சொல்லியது.

  (ப-ரை.) எருமைஉழுது உழக்கிய அள்ளற்கண்ணே நெய்தலும்
ஆம்பலும் கலிக்கும் என்றது தலைமகற்கு வேண்டுவன புரிகின்ற இல்
வாழ்க்கைக் கண்ணே தாம்பெறுகின்ற சிறப்புக் கூறியவாறு.

  குறிப்பு. அள்ளல்-சேற்றிகண். நெய்தல்-நெய்தற்பூ, கலிக்கும்-
செருக்கி வளரும், பாயல்-படுக்கை. பாயலில் இன்துணை ஆயினாள்.

 (மேற்.) மு. வாயில்கள் தலைவியது கற்புக் கூறியது (தொல்.
கற்பு. 11, ந.)

 (பி-ம்,) 1 ‘அணிநிற வெருமை? ( 6 )