5. முல்லை
(44) புறவணிப் பத்து
440. நன்றே காதலர் சென்ற வாறே தண்பெய லளித்த பொழுதின் ஒண்சுடர்த் தோன்றியுந் தளவமு முடைத்தே.
குறிப்பு. பெயல்-மேகம். அளித்த-அருள் செய்த. சுடர்த் தோன்றி-விளக்குச் சுடர் போன்ற செங்காந்தள். தளவம்-செம்முல்லை. ( 10 )
( 44) புறவணிப்பத்து முற்றிற்று.