எ-து அறத்தொடு நின்றபின்பு வரைவான் பிரிந்த தலைமகன்
கடிதின் வாராதவழி ஐயுற்ற செவிலி, ‘அவன் நும்மை துறந்தான்,
போலும் ; நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?? என்றாட்குத் தோழி
சொல்லியது.
குறிப்பு. தூம்பின் பூ-உட்டுளையையுடைய பூ. பன்னாள் எவன்
கொல், அளித்தபொழுதே வரும்.
(மேற்.) அறத்தொடு நின்றபின் வரைவான்பிரிந்து நீட்டித்துழி
ஐயுற்ற செவிலி ‘அவன் நும்மைத் துறந்தான் போலும், நுங்கட்கு
அவன் கூறிய திறம் யாது?? என்றாட்குத் தோழி கூறியது (தொல்.
களவு. 23, ந.) ( 9 )