எ-து நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு
அறத்தொடு நின்றது
.(ப-ரை) . ‘கான்யாற்றுத் தேரொடு குறுக வந்தோன்? என்றது
கான்யாற்று யாங்கள் அழுத்துழிக் குறுக வந்தோன் (எ-று) எனவே
புனல்தரு புணர்ச்சி கூறியவாறாயிற்று. ‘பேரொடு புணர்ந்தன்று
இவளுயிர்? என்றது அன்றுதொட்டு இன்னான் தந்த உயிரென
அவன் பேரொடுபட்டது இவளுயிர் எ-று இது காலத்தாற் பாலை.
குறிப்பு. பொரியாரைக் கோங்கு - பொரிந்த அரையையுடைய
கோங்கினது. பொன் மருள் பசுவீ- பொன்னையொத்த பசுமையான
மலர்களை; மருள் : உவம உருபு. இணர் - பூங்கொத்து. வேங்கை
யொடு-வேங்கை மலரொடு. வேறுபட - பலதிறப்பட. மிலைச்சி - சூடி.
வேனிற்காலத்துக் கான்யாற்றின் கண்ணே. அன்னை: விளி.
இவளுயிர் வந்தோன் பேரொடு புணர்ந்தன்று.
(பி-ம்) 1‘வேறுபட்டு? 2‘யிவள் கவினே? ( 7 )