424

5. முல்லை

(43) விரவுப் பத்து


424. புறவணி நாடன் காதன் மடமகள்
   ஒண்ணுதல் பசப்ப நீசெலிற் றெண்ணீர்ப்
   போதவிழ் தாமரை யன்னநின்
   காதலம் புதல்வ 1னழுமினி முலைக்கே.

இதுவுமது.

      குறிப்பு. நுதல் பசப்பச் செலல் : ஐங். 423 : 2. செல்லின்-
சென்றால். குழந்தைக்குத் தாமரைப்பூ உவமை; ?ஒண்குறுமாக்களை ........
................ தாமரைப் போது பிடித்தாங்கு? (மதுரைக். 461-3) ; ?அடை
மறை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட, குடைநிழற் றோன்றுநின்
செம்மலை? (கலித். 84 : 10-11). நீ செலின் புதல்வன் முலைக்கு
அழும் : தலைவி இறந்துபடுவாள் என்பது குறிப்பு.

     (மேற்.) மு. இஃது எதிரது நோக்கிற்று (தொல். கற்பு. 9, ந.).
திணை மயக்குறுதலுள் பிரிதல் எனனும் உரிப்பொருள் வந்த பாட்டு
(நம்பி. ஒழிபு., 2)

   (பி-ம்.) 1 ‘னழுமணி? ( 4 )