314

4 பாலை

(32) செலவுப் பத்து


314, அவிர்தொடி கொட்பக் கழுதுபுக வயரக்
   கருங்கட் காக்கையொடு கழுகுவிசும் பகவச்
   சிறுகண் யானை யாள் வீழ்த்துத் திரிதரும்
   1நீளிடை யருஞ்சுர மென்பநம்
   தோளிடை முனிநர் சென்ற வாறே.

   எ-து தலைமகன் பிரிந்துழி அவனுடன் போய் மீண்டார் வழிய
தருமை தங்களிற் கூறக்கேட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

   குறிப்பு. தொடி-வளை; கொட்ப-சுழல. கழுது-பேயில் ஒரு
சாதி; மதுரைக். 633. புகவு அயர - உணவு அருந்த. விசும்பு அகவ
- வானில் கத்த; திரிதரும்-திரிகின்ற. யானை திரியும் சிறுநெறி; அகநா.
123 : 1-4, 318 : 1, முனிநர் - வெறுப்பவர். ஆறு - வழி, ஆறு: யானை
திரிதரும் அருஞ்சுரம் என்ப. (பி-ம்) 1 ‘நீரிடை? ( 4 )