380

4 பாலை

(38) மகட்போக்கிய வழித் 1தாயிரங்கு பத்து


380. அத்த நீளிடை யவனொடு போகிய

    முத்தேர் வெண்பன் முகிழ்நகை மடவரல்
    1தாய ரென்னும் பெயரே வல்லா
    றெடுத்தேன் மன்ற யானே
    கொடுத்தோர் மன்றவவ ளாயத் தோரே.

   எ-து தலைமகள் உடன்போகியவழித் தெருட்டுவார்க்குச்
செவிலித்தாய் சொல்லியது.

   குறிப்பு. அத்தம்-வழி, முத்து ஏர் - முத்தையொத்த வல்லாறு-
இயன்றவரை, யான் தாயர் என்னும் பெயரே எடுத்தோன்.

   (மேற்) மு. இது செவிலி தெருட்டுவார்க்குக் கூறியது (தொல்.
அகத். 42, ந.) நம்பி. வரைவு. 14.

   (பி-ம்) 1‘தாய ளென்னும் பெயரே னல்லா? ( 10 )

     (38) மகட்போக்கியவழித் தாயிரங்குபத்து முற்றிற்று.