453

5. முல்லை

(46) பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து


453. 1அவறொறுந் தேரை தெவிட்ட மிசைதொறும்
   வெங்குரற் புள்ளின மொலிப்ப வுதுக்காண்
   கார்தொடங் கின்றாற் காலை யதனால்
   நீர் தொடங் கினவா னெடுங்கணவர்
   தேர்தொடங் கின்றா னம்வயி னானே.

     எ-து பருவங்கண்டு ஆற்றளாகிய தலைமகள் தோழிக்குச்
சொல்லியது.

    (ப-ரை.) ‘தேர்தொடங்கின்றால்? என்பது தேர் வரத்தொடங்கு
தல் இல்லையாயிற்று எ-று.

    குறிப்பு அவல்-பள்ளம். தெவிட்ட - ஒலிக்க; தெவிட்டல்
தேரையொலிக்கே பெரும்பாலும் வழங்குகின்றது: ஐங். 468 : 1,
494 : 1. மிசைதொறும் -இடந்தோறும் வெங்குரல் - விருப்பத்தக்க
ஒலி. உதுக்காண்: ஐங். 101 : 1, குறிப்பு. கார்தொடங்கின்று -
கார்ப்பருவம் தொடங்கிற்று. அவர் தேர் தொடங்கு இன்று - தலை
வரது தேர்வரத் தொடங்குதல் இல்லை,

    (பி-ம்) 1 ‘அவலுறுந்? ( 3 )