142


(15) ஞாழற்பத்து


142. எக்கர் ஞாழ லிறங்கிணர்ப் படுசினைப்
   புள்ளிறை கூருந் துறைவனை
   உள்ளேன் றோழி படீஇயரென் கண்ணே.

 எ-து வரையாது வந்தொழுகும் தலைமகன் இரவுக்குறிக்கண்
சிறைப் புறத்தானாக, ‘நின்கண் துயிறற்பொருட்டு நீ அவனை
1மறக்க வேண்டும்? என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
 (ப-ரை.) ஞாழலில் தாழ்ந்த பூச்சினை வருந்தப் புள் வதியுமென்
றது தான் வரையாது நமக்கு வரும் நோயறியாது தான் வேண்டும்
இன்பமே முடிப்பான் எ-று.

  குறிப்பு. இறங்கிணர்ப்படுசினை-தாழ்ந்த பூஞ்சினை, இறை
கூரும்-தங்கும். உள்ளேன்-நினையேன். படீஇயர்-படுக, உறங்குக;
ஐங். 450 : 4; புறநா. 202 : 14 தோழி உள்ளேன் என்கண் படீஇயர்,
தலைவி துஞ்சாமை : குறுந். 6 : 4, 243 :5.
  (பி-ம்.) 1 ‘மறுக்க?      ( 2 )